www.vallalarspace.com/durai
அறிந்து நற்சித்திரம்போல் ஆடாதிரு வன்மனமே!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம் 

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
 

அறியாது இரந்திரந்து இழைத்தது போதும்
அறியாது இறந்திறந்து பிறந்ததும் போதும்
அறிந்து மரணபயம் விட்டொழிக்க வேணும்
அறிந்து சித்திரம்போல் ஆடாதிரு வன்மனமே!     1

கட்டமும் கழட்டனும் கவலைவிட்டொழிக்கனும் பிறவிச்
சட்டமும் கிழிக்கனும் சாவையும்நோவையும் தவிர்க்கனும்
சிட்டமும் அடையனும் செல்வமெய்ப்பிள்ளை என்றொரு
பட்டமும் தரிக்கனும் தடித்தூக்கம்துறந்துநில் வன்மனமே!     2

ஏழ்நிலைக்கு மேலேயுள்ள தண்ணமுதம் நானுண்டு
வாழ்நிலைக்க வைக்கவே நம்வள்ளல் இருக்கையில்
கீழ்நிலைக்கு ஏன்எனை இழுக்கின்றாய் வன்மனமே
மேல்நிலைக்கு நீவந்து என்னோடிரு நான்களிக்கவே!    3

முத்தேகம் பெற்றிடவே இத்தேகம் மேவிவந்தோம்
இத்தேகம் அழியுமுன்னே அத்தேகம் பெறவேணும்
அத்தேகம் பெறுமுன்னே இத்தேகம் அழியுமெனில்
எத்தேகம் யான்பெறுவேன் இழியாதிரு வன்மனமே!      4

முக்காலும் அழியாத மூர்த்தம் அடைந்திடவே
முக்கண் திறந்தே முத்தேகமும் வாய்த்திடனும்
முக்கண் திறக்குமோ முத்தேகம் வாய்க்குமோ
மூடக்கண் செல்லாதே முயன்றிரு வன்மனமே!       5

மாலிலே மயங்கி அநித்தவாழ்விலே மலஞ்சார்
தோலிலே ஆசைமிகக் கொள்வனே அன்றிஅருட்
காலிலே ஆசைதனை அறிகிலேன் அந்தோஅவன்
பாலிலே நினைந்தால் பேரின்பமே புரிவன்மனமே!      6

மதத்திலே சமயவழக்கிலே கழிந்தபிறவிகள் கணக்கில
குலத்திலே நரகக்குழியிலே அழிந்தபிறவிகளும் அளவில
நிலத்திலே மயங்கி பொழுதுபோக்கி ஏமாந்ததும் எண்ணில
வலத்திலே திருவருள் வசத்திலே மகிழ்ந்திரு வன்மனமே!      7

கண்டதெலாம் அநித்தியமாம் கேட்டதெலாம் பழுதாம்
உண்டதெலாம் மலமாம் உட்கொண்டதெலாம் குறையாம்
கண்டறிந்தேன் திருஅருட்பாவில் கருத்துடனே இச்சிறுவன்
எண்டகுசிற்றம் பலத்தேஎய்தனும் நீசும்மாஇரு வன்மனமே!     8


வளமோடு இன்புற்று வாழ்க! 

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!

Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

அன்புடன்,

உங்கள் அன்பன் துரை சாத்தணன்