அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
அறியாது இரந்திரந்து இழைத்தது போதும்
அறியாது இறந்திறந்து பிறந்ததும் போதும்
அறிந்து மரணபயம் விட்டொழிக்க வேணும்
அறிந்து சித்திரம்போல் ஆடாதிரு வன்மனமே! 1
கட்டமும் கழட்டனும் கவலைவிட்டொழிக்கனும் பிறவிச்
சட்டமும் கிழிக்கனும் சாவையும்நோவையும் தவிர்க்கனும்
சிட்டமும் அடையனும் செல்வமெய்ப்பிள்ளை என்றொரு
பட்டமும் தரிக்கனும் தடித்தூக்கம்துறந்துநில் வன்மனமே! 2
ஏழ்நிலைக்கு மேலேயுள்ள தண்ணமுதம் நானுண்டு
வாழ்நிலைக்க வைக்கவே நம்வள்ளல் இருக்கையில்
கீழ்நிலைக்கு ஏன்எனை இழுக்கின்றாய் வன்மனமே
மேல்நிலைக்கு நீவந்து என்னோடிரு நான்களிக்கவே! 3
முத்தேகம் பெற்றிடவே இத்தேகம் மேவிவந்தோம்
இத்தேகம் அழியுமுன்னே அத்தேகம் பெறவேணும்
அத்தேகம் பெறுமுன்னே இத்தேகம் அழியுமெனில்
எத்தேகம் யான்பெறுவேன் இழியாதிரு வன்மனமே! 4
முக்காலும் அழியாத மூர்த்தம் அடைந்திடவே
முக்கண் திறந்தே முத்தேகமும் வாய்த்திடனும்
முக்கண் திறக்குமோ முத்தேகம் வாய்க்குமோ
மூடக்கண் செல்லாதே முயன்றிரு வன்மனமே! 5
மாலிலே மயங்கி அநித்தவாழ்விலே மலஞ்சார்
தோலிலே ஆசைமிகக் கொள்வனே அன்றிஅருட்
காலிலே ஆசைதனை அறிகிலேன் அந்தோஅவன்
பாலிலே நினைந்தால் பேரின்பமே புரிவன்மனமே! 6
மதத்திலே சமயவழக்கிலே கழிந்தபிறவிகள் கணக்கில
குலத்திலே நரகக்குழியிலே அழிந்தபிறவிகளும் அளவில
நிலத்திலே மயங்கி பொழுதுபோக்கி ஏமாந்ததும் எண்ணில
வலத்திலே திருவருள் வசத்திலே மகிழ்ந்திரு வன்மனமே! 7
கண்டதெலாம் அநித்தியமாம் கேட்டதெலாம் பழுதாம்
உண்டதெலாம் மலமாம் உட்கொண்டதெலாம் குறையாம்
கண்டறிந்தேன் திருஅருட்பாவில் கருத்துடனே இச்சிறுவன்
எண்டகுசிற்றம் பலத்தேஎய்தனும் நீசும்மாஇரு வன்மனமே! 8
வளமோடு இன்புற்று வாழ்க!
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
அன்புடன்,
உங்கள் அன்பன் துரை சாத்தணன்