www.vallalarspace.com/durai
இன்று என் கனவு!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

நான்கண்ட கனவிலின்று விண்மீன்பூத்து நிறைந்தொளிரும்
வான்கண்டு நெகிழ்ந்துவியந்து ‘என்னேபேரழகு!'- என்றுஅவ்
வான்நோக்கினேன்; அழகுமிகும் அவ்ஒளிவானில் - இதுவரை
நான்காணாத திருக்கை மீன்ஒன்று வலம்சுழன்றதுவேஆங்கு!

திருக்கையோ அல்லது திருக்கைமீன்வடிவ விண்கலமோ?
திகைப்புற்றே அத்திருக்கையின் முகப்பை நோக்கினேன்
திருக்கையும் எனைநோக்கியது! அழகிய மனிதமுகம்அது!
திருக்கையின் மின்முகஒளி என்மீதுவிழுந்து உள்நிறைந்தது!

வேண்டுவது கேள்என்றதுபோல் தன்ஒளியால் கேட்பதுணர்ந்து,
வேண்டுவது கேட்கத்தெரியாதே தலைகுனிந்து வணங்கினேன்!
வேண்டுவதும் உள்ளிருந்து உடன்உதித்தது! ‘அதுஇவ்வுலகமாந்தர்
வேண்டும்நல் ஆட்சியே!’ அதுதந்தனம்என்றது விழித்தேன்விடிந்தது!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்
2 Comments
ஸ்வாமி  இராஜேந்திரன்
காட்சியின் சிறப்பு கவிதையில் தெரிகிறது! வாழ்க வாழ்க!
Thursday, March 16, 2017 at 20:58 pm by ஸ்வாமி இராஜேந்திரன்
Durai Sathanan
நன்றி ஐயா. வளமோடு இன்புற்று எக்காலத்தும் வாழ்க! அருட்பெருஞ்ஜோதி...
Friday, March 17, 2017 at 06:01 am by Durai Sathanan