www.vallalarspace.com/durai
இன்று ஞாயிற்றுக்கிழமை (19.03.2016), வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்த அகில உலக நேரலை நிகழ்வு!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

இன்று ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்த நேரலை நிகழ்வில் கலைமாமணி, அருட்செல்வர் திருமிகு மலையூர் சதாசிவம் ஐயா அவர்களும் மற்றும் அருட்செல்வர் சுவாமி சுப்பிரமணியம் அவர்களும் மிக அற்புதமாகப் பாடிய ஆறாம் திருமுறை அருட்பாக்களைக் கீழ்க்கண்ட முகநூல் இணைப்பிலும், இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒலிப்பதிவிலும் நம் அருளன்பர்கள் கேட்டு மகிழலாம்!

https://www.facebook.com/duraisathanan/videos/876791239128718/


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan

Audio:

4 Comments
Daeiou  Daeiou.
Listened to the Thiru Arutpa songs by Mazhaiyr Sadasivam.
Sunday, March 19, 2017 at 21:13 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
பாடியதைக்கேட்டுக் கருத்துச் சொல்லியதற்கு..அவர் நன்றி தெரிவித்தார். ஆறாம் திருமுறை பாடல்கள் பாடும்படி தம்மிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்ததாகவும், அவர் தெரிவித்தார். அவர் மூலம், உலகம் எல்லாம், .. இசைக் கருவி..ஏது இன்றி..திரு அருட்பா பாடல்களை மட்டுமே.பாட வைத்ததற்கு..திரு துரைப் பாண்டியன் அவர்களுக்கு...நன்றி...
Monday, March 20, 2017 at 01:00 am by Daeiou Daeiou.
Durai Sathanan
"இசைக் கருவிகளின் அதீத ஓசையின்றி அருட்பாவில் கனிந்து பாடும் அவரது குரலை மட்டுமே நேரலையில் தனித்துக் கேட்கும் போது, மிகுந்த ஆன்ம உருக்கமாகவும்,நெகிழ்வாகவும் இருந்தது!" - என்று நேரலை நிறைவில் இணைப்பிலிருந்த பன்னாட்டு அன்பர்கள் தங்களின் மகிழ்வைப் பகிர்ந்துகொண்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்கு நன்றிகள் பல கூறிப் பாராட்டினார்கள் ஐயா. அப்படியிருக்கும் போது, அந்த நம் ஐயா அவர்கள் இனிக் கவனத்துடன், விடுதலின்றிப் பாடுவதற்கு அவரிடம் தயங்காது அன்போடு ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் பல ஐயா. வளமோடு இன்புற்று வாழ்க! அருட்பெருஞ்ஜோதி...
Monday, March 20, 2017 at 05:07 am by Durai Sathanan
Daeiou  Daeiou.
கருவிகளின்றி இசைத்த அவரது பாடல்களிலிருந்த கனிவு, குழைவு...அனைவரையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சன்னதிக்கே எடுத்துச் சென்றன...ஏற்பாடு செய்து, திருவருளின் பாத்தியத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியமைக்கு நன்றி...
Monday, March 20, 2017 at 09:40 am by Daeiou Daeiou.