www.vallalarspace.com/durai
பேரன்பும் பெருமதிப்பும்உடைய அருளாளப் பெருமக்களே!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

பேரன்பும் பெருமதிப்பும்உடைய அருளாளப் பெருமக்களே
பேரருளாளன் திருவருளால் வளமோடு இன்புற்றுவாழ்கவே!
தங்களின் அன்புக்குடும்ப அங்கத்தார்களும் அருள்மிகும்
தங்கமே அனையார்கூடிய நம்சங்கமேநின்று செழிக்கட்டும்!

தாங்கள் இந்தஅருள்இணைப்பிலே இணைந்தது அவன்திருச்செயலே
தங்களின் நேயநல்வாசகத்தை அருள்வாசகமாய்க் கருதுகின்றோம்
நாங்கள் ஆற்றும் சிறுசெயல்களையும் அருளோடுகண்ணுற்றுஇங்கு
தாங்கள் அளிக்கின்ற திருவாசகத்தால் அகப்பேராற்றல்ஓங்குகின்றது!

ஆறாம் திருமுறை / 019. பிள்ளைச் சிறு விண்ணப்பம்

இவ்வுல கதிலே இறைஅர சாட்சி இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் எண்ணுதோ றருவருக் கின்றேன்
அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் அரிமுத லோர்அடை கின்ற
கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் எந்தைஎன் கருத்தறிந் ததுவே.

சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் தனித்தபே ரன்புமெய் அறிவும்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் றாடித்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் செய்வதென் இச்சையாம் எந்தாய்.

உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி உன்அறி வடையும்நாள் வரையில்
இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் எண்ணியும் நண்ணியும் பின்னர்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடிநின் றுனையே
அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் அடியனேற் கிச்சைகாண் எந்தாய்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!

அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்