www.vallalarspace.com/durai
திருவருட் சமூகத்தில் அனுதினமும் பிரார்த்திப்போமாக!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!


திருநிலைத்து நல்அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் நாங்கள் செழித்தோங்கி வாழ்ந்திட
உருநிலைத்து இவ்வுலகில் புல்லோர்களும் நல்லோர்களாகிப் புனிதம்முற்றுத் திகழ்ந்து மலர்ந்திட
தெருள்நிலைத்துக் கறுநிறத்தர் கீழ்மேலவரென்ற பேதமெலாம் நீக்கம்பெற்று நெகிழ்ந்து மகிழ்ந்திட
அருள்நிலைத்து ஏழைபணக்காரென்ற நெடும் ஏக்கமெலாம் விரைந்தே இறந்தொழிந்து மாய்ந்திட
பொருள்நிலைத்து உயிர்க்கருணைத் தொழில்புரி அகிலத்து உழவரெலாம் செல்வம்பெற்று இன்பமுற
இருள்நிலைத்து ஓங்கும் இக்குவலயத்துக் கருணையிலாக் கொடியஅரசெலாம் கருகிஅழிந் தொழிந்திட
மருள்நிலைத்து வெறிபிடித்த தேசபேதசாதிநெறி சமயமத மார்க்கமெலாம் சமரசம்கண்டு நல்ஒளிபெற
குருநிலைத்த சற்குருஎனும் இறைவநின் திருவருள் இயல்வடிவொடுமன்றில் குரைகழற் பதம்போற்றி.


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

எல்லாம் செயல்கூடும் அருளாணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!

வாழ்க சமரசம்! வளர்க சுத்த சன்மார்க்கம்!
திருச்சிற்றம்பலம்

அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்

 

Chitrambalam Ramaswamy
Excellent manifestation/abstract of Vallalar's preaches!! very nicely done systematic gathering!!
Tuesday, April 25, 2017 at 04:20 am by Chitrambalam Ramaswamy