DAEIOU - தயவு
9.9.2017 திண்டுக்கல் பூங்குன்றனார் பள்ளியில் சன்மார்க்க வகுப்பு நடைபெற்றது.
    9.9.2017 சனிக்கிழமை அன்று காலை 10.15 மணி அளவில், திண்டுக்கல் பூங்குன்றனார் பள்ளியில், சன்மார்க்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 4 கல்லூரிகளிலிருந்து, மாணவ மாணவியர் சுமார் 150 பேர்கள் பங்கேற்றனர். திரு சிவராம், மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், திருமதி சரோஜினி புதியவன், திருமதி லக்‌ஷ்மி ஆகியோர் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறிகளை, மாணவ மாணவியருக்கு போதித்தனர். அனுக்ரஹா கல்லூரி, எம்.வி.எம் கல்லூரி மற்றும் 2 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்த சன்மார்க்க வகுப்பிலிருந்து, 4 பேரை, தேர்வு செய்து, அவர்கள், வடலூரில் சுத்த சன்மார்க்கம் குறித்துப் பேசுவதற்குத் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டம் மதியம் 1.00 மணி அளவில் நிறைவுற்றது. அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. 
20140224_102739~2.jpg

20140224_102739~2.jpg

Durai Sathanan
வாழ்க சமரசம்! வளர்க சுத்த சன்மார்க்கம்!
Sunday, September 10, 2017 at 15:22 pm by Durai Sathanan