திரு பாலகிருஷ்ண பிள்ளை அவர்கள் பதிப்பித்த திரு அருட்பா...தற்போது செம்பதிப்பு வடிவில் கிடைக்க உள்ளது. திரு வேங்கை மைந்தன் அவர்கள், இதற்கான சீரிய முயற்சிகள் செய்து வருகின்றார். இன்னும் 200 பிரதிகள் புக்கிங் செய்துவிட்டால், ஏற்கனவே அறிவித்த சலுகை விலையில் அனைத்து அன்பர்களுக்கும் இது வழங்க இயலும் எனத் தெரிவித்துள்ளார். எனவே முன் பதிவு தேதி, 15.11.2017 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. அன்பர்கள், தமக்காகவும், சங்கத்தில் வாங்கி வைத்து, அன்பர்களுக்கு வழங்குவதற்குமாக, மொத்தமாகவும் புக்கிங் செய்தால், இந்த 200 பிரதிகள் புக்கிங் வெகு சீக்கிரம் நிறைவு பெற்று, புத்தகங்கள் அன்பர்களுக்கு வெகு விரைவில் கிடைக்கும் நிலை ஏற்பட்டு விடும். எனவே, இது குறித்து தமது கோரிக்கைகளை, குறிப்பிட்ட அந்த அச்சகத்துக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டப்படுகின்றது. வடலூரில் 6.10.2017 அன்று காலையில், திரு வேங்கை மைந்தன் அவர்களை, திரு நமசிவாயம் ஐயா அவர்கள் சன்மார்க்க விழா நடைபெற்ற மேடையில் காலை 10.15 மணி அளவில் அன்பர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
IMG_20170209_081828.jpg
Write a comment