கடந்த 3.11.2017 அன்று, மேட்டுக் குப்பத்தில், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு எம்.ஏ.வெங்கட் அவர்களுக்குச் சொந்தமான கட்டிடத்தின் மாடியில், அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ஒரு கோடி முறை ஜெபித்தல் என்ற நிகழ்ச்சி துவங்கப்பட்டது. பல்வெறு இடங்களிலுமிருந்து, சன்மார்க்க அன்பர்கள், இந்த மகா மந்திர ஜெபத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஒரு மண்டலம் இந்த ஜெபம் நடைபெறவிருப்பதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வடலூர் வருகை தரும் சன்மார்க்க அன்பர்கள், மேட்டுக் குப்பத்தில் நடைபெறும் இந்த ஜெபத்தில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென திரு எம்.ஏ.வெங்கட் கேட்டுக் கொள்கின்றார். உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
IMG_20171002_105545.jpg
Write a comment