DAEIOU - தயவு
மதுரையிலிருந்து வடலூர் செல்லும் பாத யாத்திரைக்குழு 16.1.2018 மதுரை வருகை.
   வருடந்தோறும் தைப் பூச விழா காண, வடலூருக்குச் செல்லும் சன்மார்க்க அன்பர்கள் குழு, பல மாவட்டங்களிலுமிருந்து செல்வது வழக்கம். கம்பம், தேனி, ஆண்டிபட்டி ஆகிய ஊர்களிலிருந்து, இன்று, 16.1.2018 மதியம் மதுரைக்கு சன்மார்க்க அன்பர்கள் வருகை புரிந்தனர்.



மதுரை சிம்மக்கல் (மாடியில்) உள்ள சன்மார்க்க சங்கத்தில் மதிய உணவு அருந்தினர். வடக்கு மாசி வீதியின் அருகே உள்ள ராமானுஜ கூடத்தில் அவர்கள் இன்று தங்குகின்றனர். நாளை காலை, அவர்கள் வடலூருக்கு பாத யாத்திரை துவங்கவுள்ளனர். சன்மார்க்க அன்பர் திரு இராமலிங்கம் அவர்களுக்குத் தலைமையேற்றுச் செல்கின்றார்.
IMG_20170209_082018.jpg

IMG_20170209_082018.jpg