வரவிருக்கும் 8.4.2018 அன்று, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோவிலில், திருவாசகம் முற்றோதல் நடைபெறவுள்ளது. திருக்கழுக்குன்றம் தவத்திரு தாமோதரன் ஐயா அவர்களின் குழுவினர் இந்நிகழ்ச்சியினை நடத்தவுள்ளனர். தோத்திரத்திற்கு திருவாசகம் பயில வேண்டுமென வள்ளற் பெருமான் அறிவுறுத்தியுள்ளார். காலை 6.00 மணிக்கு, ஊர்வலம் நடைபெற்ற பின், காலை 7.00 மணி முதல், திருவாசகம் முற்றோதல், அங்கு நடைபெறும். அனைவரும் பங்கு பெற்று அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் திருப்புவனத்திற்கு அடுத்த ஊர்..திருப்பாச்சேத்தியாகும்.
20141011_103331.jpg
Write a comment