DAEIOU - தயவு
21.6.2018 மதுரை அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில் சன்மார்க்க முறையில் திருமணம் நடைபெறல்.
    இன்று 21.6.2018 வியாழக்கிழமை மதுரை மாவட்டம் அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில், சன்மார்க்கத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில், மதுரை சன்மார்க்க அன்பர் திரு சங்கரானந்தம் அவர்கள் தலைமையில், சூர்யா நகர் திரு ஜெகன்னாதன், அனுப்பானடி திரு பெருமாள் ஆகியோர் முன்னிலையிலும், மற்றும் மணமக்களின் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களும் கூடி, அருட்பெருஞ்ஜோதி அகவல், அட்டகம் முதலான பதிகங்களைப் பாடி, சன்மார்க்க முறையில், இந்த தருமச்சாலையில், முதல் சன்மார்க்கத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.  மூத்த சன்மார்க்க அன்பர்களும், மூத்த பெரியோர்களும், மணமக்களை வாழ்த்தினர். வள்ளலார் வழியில் வாழ்க்கை நடத்த வலியுறுத்தி, திரு ஜெகநாதன் ஆசி அருளினார். வந்திருந்த அனைவருக்கும் காலை உணவளிக்கப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகளை, திரு தருமலிங்கம் ஐயா அவர்களும் அவரது மனைவியாரும் ஏற்பாடு செய்திருந்தனர்.
vlcsnap-2018-06-21-09h48m07s018.png

vlcsnap-2018-06-21-09h48m07s018.png

vlcsnap-2018-06-21-09h36m51s650.png

vlcsnap-2018-06-21-09h36m51s650.png

vlcsnap-2018-06-21-09h36m19s715.png

vlcsnap-2018-06-21-09h36m19s715.png

vlcsnap-2018-06-21-09h47m46s312.png

vlcsnap-2018-06-21-09h47m46s312.png

4 Comments
Thangaraj Aru
ஐயா சன்மார்க்க திருமணம் நடைபெறும் முறை பற்றி மேலும் விளக்கமாக தெரிய விரும்புகிறேன்
Thursday, June 21, 2018 at 04:49 am by Thangaraj Aru
Daeiou  Daeiou.
மேட்டுக் குப்பம் திரு கிஷோர்...சன்மார்க்க அன்பர்..சன்மார்க்கத் திருமணம் செய்து வைக்கின்றார். அவரது தொடர்பு எண்.98658 18578.
Friday, June 22, 2018 at 15:20 pm by Daeiou Daeiou.
Thangaraj Aru
தகவலுக்கு நன்றி
Saturday, June 23, 2018 at 07:23 am by Thangaraj Aru
Daeiou  Daeiou.
வடலூரில் வள்ளலார் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் காட்சிக் கூடம் அருகே சன்மார்க்கப் புத்தகக் கடை வைத்து நடத்தும் திரு குரு பக்கிரிசாமி ஐயா அவர்களும் நெடுங்காலமாக சன்மார்க்க முறையில் திருமணம் நடத்துகின்றார் என்ற தகவலும் உள்ளது. அவரது தொடர்பு எண். கிடைக்கப் பெறவில்லை.
Saturday, June 23, 2018 at 08:56 am by Daeiou Daeiou.