DAEIOU - தயவு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம்..அதன் கிராமங்களின் மக்களின் நிலை.
      கடந்த 26.11.2018 (திங்கட் கிழமை) அன்று மாலை சுமார் 6.30 மணி அளவில், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் நால்வர், ஒரு வேனில் அரிசி மூடைகள், பருப்பு மூடைகள் போன்றவற்றுடன், ”கஜா புயல் பாதித்த” நாகப்பட்டினம் மாவட்டம் கொன்றைக்காடு கிராமத்தில், அந்த கிராம மக்களுக்கு, உணவுப் பொருட்கள் வழங்கினர். மேற்படி கிராம மக்கள் அனைவரும் சன்மார்க்க அன்பர்களின் இந்த உதவியைப் பெற்றுக் கொண்டு மிகவும் குதூகலமடைந்தனர்.  தனது சொந்த வண்டியுடன், திரு கண்ணப்பன் மூத்த சன்மார்க்க அன்பர், மதுரையிலிருந்து, தன் மனைவி திருமதி மீனாளுடன், சன்மார்க்க சான்றோர்களை ஏற்றிக் கொண்டு, இந்தப் பணியில் ஈடுபட்டார்.
vlcsnap-2018-11-25-21h56m29s583.png

vlcsnap-2018-11-25-21h56m29s583.png