Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக்குறள் எண்.59 ஆறாம் அதிகாரம்..தெய்வ வழிபாடு..சுவாமி சரவணானந்தா.
விழாவழி பாட்டால் விளையறி வன்பு
நிலாவிட வேண்டும் நிலத்து.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=



குறள் விளக்கம்.

     பொது மக்களை ஒன்று கூட்டித் திருவிழா முதலியன கொண்டாடுவதால், மெய்யறிவு விளக்கமும், மெய்யன்புச் செயலும், வெளிப்படுத்தப் பெறல் வேண்டும்.

     அகத்தில் அறிவும், புறத்தில் அன்பும் வளர்த்தற்கே விழா எடுத்தலன்றி, வீண் ஆரவாரமும், பெரும் பொருள் விரயமும், அர்த்தமற்ற செயல்களும் கூடாவாம்.
IMG_20160729_131111.jpg

IMG_20160729_131111.jpg