Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
மனோ வசியம்.. தியானமும் தியாகமும் இணைந்து வழங்கும் அனக வாழ்வு நூலிலிருந்து.
மனோ வசியம்.
(தியானமும் தியாகமும் இணைந்து வழங்கும் அனக வாழ்வு) என்ற நூலிலிருந்து.
சுவாமி சரவணானந்தா.

000000000000000000000000000000000000000000000000000000000000

       தியானத்தின் ஓர் அனுபவ சித்தி நிலையே மனம் தன் வயப்பட்டு அற்புதச் செயல் பல புரிய உதவுவதாம். மனம் வசப்பட்ட நிலையே மனோ வசியமாகவுள்ளதாம். இந்த மனோ வசிய சக்தியால் ஒருவன் தன் இச்சைப்படி கரண இந்திரியங்களையும், உயிர்ப்பியக்கத்தையும், இரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்தவும் நடத்தி வைக்கவும் முடிகின்றதாம். இதனால் காண்பரிய காட்சிகளும், கற்பனைத் தோற்றங்களும் மறை பொருள் விளக்கங்களும், நோய் நொடி போக்கலும், பிறரைத் தன் இச்சைப்படி நடக்கச் செய்யவும் இன்னும் பல அற்புதங்களைப் புரியவும் முடியும். இவ்வளவு செய்தும் முடிவில் என்ன பயன் என்று பார்க்கும் போது திருவருள் கிடைக்காமையால், உயிர் ஒடுங்கிடும் தருணம் எல்லா ஆற்றலும் மனத்தை விட்டுச் சென்று விடுகின்றன. இருள் வந்து மூடிக் கொள்ளுகின்றது. அப்போது தியானம் - அந்தர் தியானம் ஆகிவிடுகின்றது. அதாவது மறைந்து விடுகின்றதாம்.
vlcsnap-2018-03-25-19h46m41s500.png

vlcsnap-2018-03-25-19h46m41s500.png

Thangaraj Aru
நன்று, கைவரப் பெற்ற சித்திகள் நம்முடைய பிறப்பறுக்கும் யுக்திக்கு உதவாது என்பதை ஐயா தெளிவுபடுத்தி உள்ளார்
Thursday, June 21, 2018 at 04:52 am by Thangaraj Aru