Srilanka Gnana Sabai Temple
இலங்கை சாவகச்சேரி சத்திய ஞான கோட்டத்தில், மார்கழி தை ஆகிய மாதங்களில், திருவாசகம், திரு அருட்பா ஓதுதல்.
      இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கு கிராமம். அங்கு, திரு கேதீஸ்வரன், திருமதி விஜயலக்‌ஷ்மி தம்பதியர், சத்திய ஞான கோட்டம் கட்டி, 2010ஆம் ஆண்டு முதல், சுத்த சன்மார்க்க நெறி, இலங்கையில் பரவுவதற்கு அருந்துணையாக உள்ளனர். 

      வரும் மார்கழி மாதம் முதல் தைப்பூசம் ஈறாக....அவர்கள், அங்கு, திருவாசகம், திரு அருட்பா ஆகியவற்றை, அங்கு வாழும் சன்மார்க்க அன்பர்கர்ர்ள் மூலமாக, முற்றோதல் செய்ய தீர்மானித்துள்ளனர். அது குறித்து, அவர்கள் வெளியிடும் அறிவிப்பு, வரப்பெற்றதும், இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும். வாய்ப்புள்ள அன்பர்கள், இந்த அருமையான, அருள் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுமென அவர்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றனர்.

     தற்போது, மதுரையிலிருந்தே, (இலங்கை) கொழும்புவிற்கு, விமான சேவை உள்ளது. சென்னை, திருச்சியிலிருந்தும், நேரடியாக இலங்கைக்கு விமானசேவை உள்ளது. அன்பர்கள், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகின்றோம்.
2014-12-16 13.48.56 (1).jpg

2014-12-16 13.48.56 (1).jpg

2010 Sathiya Gnana kottam.JPG

2010 Sathiya Gnana kottam.JPG

2014-12-17 08.00.19.jpg

2014-12-17 08.00.19.jpg

SDC14805.JPG

SDC14805.JPG