"அயல் நாட்டிலிருந்து வந்து சொன்னாதான் கேட்பீர்கள்"- இதை வள்ளற்பெருமான் சொன்னார்களா?
நீண்ட யோசனைக்கு பின் ஏபிஜெ அருள் அவர்கள் அளித்த பதில்:
””நான் சொன்ன கேட்க மாட்டீங்க, அயல் நாட்டிலிருந்து (அமெரிக்கா உட்பட) வந்து எடுத்து சொன்னப் பிறகு தான் புரிந்து கொள்வீர்கள். அப்பொழுது நம் நாட்டிற்கு பெருமை வந்து சேரும்” என்று வள்ளலார் சொன்னதாக கூறிகிறார்கள்.
அது உண்மயா ? விளக்கம் வேண்டும் என்று பணிவாக ஏபிஜெ அருள் அவர்களிடம் போன் மூலம் வேண்டினேன்.
நீண்ட யோசனைக்கு பின்பு பதில் அளித்தார்கள்;
சகோதரரே! இது நல்ல விசயந்தானே! இதில் என்ன தவறு? ஆனால் வள்ளலார் சொன்னாரா? சொல்லி இருப்பாரா? என்றால் கண்டிப்பாக இது போல் வள்ளலார் சொல்லியிருக்க மாட்டார்கள்.
காரணம், நீங்கள் கூறியதில் உள்ளதை கவனியுங்கள் அதில் ”நம் நாடு” / நம் நாட்டிற்கு என உள்ளது. வள்ளலாரிடம் தேச ஆச்சாரம் கிடையாது என அறிக! அதற்கு ஆதாரம் உரை நடைப்பகுதி பக்கம் 410 அதில் கருணை விருத்திக்கு தடையாக சாதி சமய கட்டுப்பாட்டு ஆச்சாரங்கள் உள்ளன என்கிறார். இது வள்ளலாரின் சத்திய வாக்கியம் ஆகும். அதில் ஒன்று “தேச ஆச்சாரம்” ஆகும். ஒழிக்க வேண்டிய ஆச்சாரமாக “தேசப் பற்று” இருக்கும் போது, ’நம் நாட்டிற்கு’ என எப்படி நம் வள்ளலார் சொல்லியிருப்பார்கள்?
மேலும் எதற்கு இது போல் சிந்திக்கிறீர்கள்? யார் எங்கிருந்து வந்தாலும் வள்ளலார் சொன்னதை உள்ளது உள்ளபடி எடுத்து சொன்னால் சரிதான். சாதி சமய மதங்களில் பற்று வைத்துக் கொண்டியிருப்பவர்களால் வள்ளலாரின் கருத்துக்களை உள்ளது உள்ளபடியாக தர முடியாது. தமது சொந்த அனுபவங்களை வள்ளலாரின் நெறியோடு கலந்து பலர் தருவதால், சொல்லும் அவருக்கும், கேட்டுக் கொண்டியிருக்கும் நமக்கும் உண்மை காரியப்படாது என சத்தியமாக அறிதல் வேண்டும். நிற்க! நூல் மூலமாகவோ, கேட்பதின் மூலமோ எந்தொரு பயனோ உண்மையோ கிட்டாது. எல்லோருக்கும் அக அனுபவமே உண்மையாகும் என்கிறார் வள்ளலார்.
அன்பரே!
பிறர் குற்றம் விசாரியாதிருத்தல்.
தன்னை மதியாதிருத்தல்.
இவையில் நல்ல விசாரணை செய்வோம்.
நன்றி.
நீண்ட யோசனைக்கு பின் ஏபிஜெ அருள் அவர்கள் அளித்த பதில்:
””நான் சொன்ன கேட்க மாட்டீங்க, அயல் நாட்டிலிருந்து (அமெரிக்கா உட்பட) வந்து எடுத்து சொன்னப் பிறகு தான் புரிந்து கொள்வீர்கள். அப்பொழுது நம் நாட்டிற்கு பெருமை வந்து சேரும்” என்று வள்ளலார் சொன்னதாக கூறிகிறார்கள்.
அது உண்மயா ? விளக்கம் வேண்டும் என்று பணிவாக ஏபிஜெ அருள் அவர்களிடம் போன் மூலம் வேண்டினேன்.
நீண்ட யோசனைக்கு பின்பு பதில் அளித்தார்கள்;
சகோதரரே! இது நல்ல விசயந்தானே! இதில் என்ன தவறு? ஆனால் வள்ளலார் சொன்னாரா? சொல்லி இருப்பாரா? என்றால் கண்டிப்பாக இது போல் வள்ளலார் சொல்லியிருக்க மாட்டார்கள்.
காரணம், நீங்கள் கூறியதில் உள்ளதை கவனியுங்கள் அதில் ”நம் நாடு” / நம் நாட்டிற்கு என உள்ளது. வள்ளலாரிடம் தேச ஆச்சாரம் கிடையாது என அறிக! அதற்கு ஆதாரம் உரை நடைப்பகுதி பக்கம் 410 அதில் கருணை விருத்திக்கு தடையாக சாதி சமய கட்டுப்பாட்டு ஆச்சாரங்கள் உள்ளன என்கிறார். இது வள்ளலாரின் சத்திய வாக்கியம் ஆகும். அதில் ஒன்று “தேச ஆச்சாரம்” ஆகும். ஒழிக்க வேண்டிய ஆச்சாரமாக “தேசப் பற்று” இருக்கும் போது, ’நம் நாட்டிற்கு’ என எப்படி நம் வள்ளலார் சொல்லியிருப்பார்கள்?
மேலும் எதற்கு இது போல் சிந்திக்கிறீர்கள்? யார் எங்கிருந்து வந்தாலும் வள்ளலார் சொன்னதை உள்ளது உள்ளபடி எடுத்து சொன்னால் சரிதான். சாதி சமய மதங்களில் பற்று வைத்துக் கொண்டியிருப்பவர்களால் வள்ளலாரின் கருத்துக்களை உள்ளது உள்ளபடியாக தர முடியாது. தமது சொந்த அனுபவங்களை வள்ளலாரின் நெறியோடு கலந்து பலர் தருவதால், சொல்லும் அவருக்கும், கேட்டுக் கொண்டியிருக்கும் நமக்கும் உண்மை காரியப்படாது என சத்தியமாக அறிதல் வேண்டும். நிற்க! நூல் மூலமாகவோ, கேட்பதின் மூலமோ எந்தொரு பயனோ உண்மையோ கிட்டாது. எல்லோருக்கும் அக அனுபவமே உண்மையாகும் என்கிறார் வள்ளலார்.
அன்பரே!
பிறர் குற்றம் விசாரியாதிருத்தல்.
தன்னை மதியாதிருத்தல்.
இவையில் நல்ல விசாரணை செய்வோம்.
நன்றி.
flight-image.jpg
thinking-head.png
11 Comments
சொன்னவருக்கு அயல் நாட்டுக்காரரிடம் ஏதேனும் காரியம் ஆக வேண்டியிருந்திருக்கும். அக்காலத்தில் அன்னிப்பெசண்ட் மற்றும் சில அமைப்புகள் நம் பெருமானை போற்றினார்கள். APJ ARUL's கட்டுரைகள் ஏன் போஸ்ட் ஆகாமல் உள்ளது. சுய நலமின்றி உள்ளபடியாக எழுதும் சுத்த சன்மார்க்கியாக அவர்கள் உள்ளார்கள். THANNKS ALL - Dr.Narayani
- என்று வருகின்றதே பேருபதேசத்தில். அதில், சாதியின் பெயர் வருவதால், பேருபதேசமும் பெருமானால் பேசப்பட்டது இல்லையோ?
"...ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா..."
"எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி"
இவற்றில் மதம் இல்லையா?
என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார் பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான் சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே. இங்கு தன்சாதியில் சாதி இல்லையா? அய்யா தெளிவு வேண்டும். நன்றி
மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர்....இக்குல மாதரும் யானும்என் நாதர் இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது...பூரண நோக்கம் பொருந்தினை நீதான் எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
இங்கு, குலம் இல்லையா? குழப்பமாக உள்ளது! நன்றி...
உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதில் எந்தப் பின்னடைவும் ஏற்பட்டு விடாது.
http://www.vallalarspace.com/KarunaiSabai/c/V000020708B