திருஅருட்பிரகாச வள்ளல் பெருமனார் தன் அகத்துள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் கண்டு அனுபவித்தார்கள் .தன்னைப் போல உலகத்தாரும் அனுபவிக்க வேண்டுமென விரும்பினார்கள்.
இதற்காகவே ஆறாயிரம் அருட்பாக்களை அருளினார்கள். மேலும் , தான் கண்டு - உணர்ந்து - அனுபவித்த அருட்பெருஞ்ஜோதியைக் காட்சிப்படுத்தும் வகையில் வடலூர் பெருவளியில் சத்திய ஞான சபையை அமைத்தார்கள்....
★மனித தேகத்தினுள் இறைவன் பெரும் ஜோதியாய் விளங்கும் பாங்கு பற்றி பெருமனார் கூறியுள்ள உபதேசப் பகுதி வருமாறு :
◆ "இந்தப் பவுதிக உடம்பில் இருக்கின்ற நீ யார் எனில் ; நான் சிற்றணு வடிவன்."
◆"மேற்படி அணு கோடி சூரியப்பிரகாசம் உடையது. "
◆"லலாட ஸ்தானம் (=புருவ மத்தி) இருப்பிடம்"
◆"கால் பங்கு பொன்மை , முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம்"
◆""இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சக்திகளாகிய 7 திரைகள் உண்டு............ "
>>>>>என்று வள்ளல் பெருமனார்
Write a comment