அருள்பாவலர் சக்திவேல் .வே
மன்னை நகர குரு வார சன்மார்க்க வழிபாடு
திருவாரூர் மாவட்டம் ; மன்னார்குடி - மூன்றாம் தெரு மெயின் ரோட்டில் அமைந்துள்ள தாமரை மெடிக்கல் மற்றும் அபி இரத்த பரிசோதனை நிலையத்தில் ; இன்று 27/07/2017வியாழக்கிழமை விடியல் பொழுதில் குரு வார சன்மார்க்க வழிபாடும் தர்மச்சாலை பணியும் நடைபெற்றது.

★விடியற்காலை 4.30 மணியளவில் திருஅருட்பா கூட்டு வழிபாடு தொடங்கியது.

◆ சற்குரு வணக்கம்,
திருப்பள்ளியெழுச்சி
திருவடிப்புகழ்ச்சி
அருட்பெருஞ்ஜோதி அகவல் அருட்பெருஞ்ஜோதி அட்டகம் ஆகிவற்றை பாராயணம் செய்து சன்மார்க்க கூட்டுவழிபாடு காலை 6.00மணியளவில் நிறைவேறியது.

★ காலை 6.10 மணியளவில் வள்ளலார் கண்ட மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை கஞ்சி திருவமுது வழங்கப்பட்டது.

★ இச்சன்மார்க்க நிகழ்வு பிரதி வியாழன் தோறும் நடைபெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிராத்திக்கின்றோம்.