அருள்பாவலர் சக்திவேல் .வே
மன்னை நகர சன்மார்க்கக் குரு வார வழிபாட்டின்... இரண்டாம் ஆண்டுவிழா....
மன்னார்குடி நகர வள்ளலார் - குரு வார வழிபாட்டின் - தர்மச்சாலையின் இரண்டாம் ஆண்டு விழா.....

இன்று (21 / 06 / 2018 ) வியாழக்கிழமை , விடியற்காலை பொழுதில் ; மன்னார்குடி மூன்றாம் தெரு - மெயின் ரோட்டில் அமைந்துள்ள தாமரை மெடிக்கல் & அபி இரத்த பரிசோதனை நிலையத்தில் மன்னை தர்மச்சாலையின் இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

தாமரை மெடிக்கல் வளாகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் சன்மார்க்க குரு வார வழிபாடும் , வள்ளலார் ஞான மூலிகைக் கொண்டு தயாரிக்கப்பட்ட திருவமிழ் வார்த்தலும் கடந்த ஓராண்டுகாலமாய்த் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிகழ்வின் ஒராண்டுகால நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று ( 21 / 06 / 2018 ) சிறப்பு சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது.

★ விடியற்காலை 4 .30 மணி முதல் 6 .00 மணிவரை , திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணக் கூட்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது

★ காலை 6. 15 மணியளவில்... வள்ளல் பெருமனாரின் ஞான மூலிகைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சி திருவமுது வார்த்தலும் நடைபெற்றது. சிறப்பு ஜீவகாருண்ய அன்னதானமும் நடைபெற்று .

★இந்நிகழ்வில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தைச் சார்ந்த பற்பல சன்மார்க்க அன்பர்கள் கலந்துகொண்டனர்.

★ மன்னை நகரத்தில்.... இச்சன்மார்க்கக் குருவார வழிபாடு தொடர்ந்து ... வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பிராத்திக்கின்றோம்...!

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் செயல் கூடும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...

வள்ளல் மலரடி வாழி... வாழி...

https://photos.app.goo.gl/XSWbbMHq7uaWutuP9