நான் வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து வருகிறேன். கந்தசாமி பிள்ளை அய்யா எழுதிய புத்தகத்தில், மேட்டுக்குப்பத்துக்கு அவர் சத்தியஞான சபை ஆரம்ப கட்டிட வேலை நடக்கும் போது (அதாவது 1971 இல் ) சென்றதாக கூறி உள்ளார். பொதுவாக அனைத்து சன்மார்கிகளும் கூறுவது 1870 இல். இதில் எது சரி என்று தயவு செய்து விளக்கவும்
6 Comments
வள்ளலார் அமைத்த ஞான சபை - 16 அடி சுற்றுவட்டத்தில் ஒரு பாதாள அறையும் , அதன் மேற்புறத்தில் ஒரு மேடையும் , அதன் மேல் பகுதியில் கல் தூண் போன்ற ஒரு கம்பமும் , அதில் பிறை போன்ற ஒரு அமைப்பும் அந்த பிறை மேல ஒரு அகல் விளக்கின் உருவமும் , அதில் எண்ணெய் ஊற்றி திரி போட்ட விளக்கும் , அதற்கு முன்னால் ரசம் பூசிய கண்ணாடியும் , நான்கு புறத்திலும், இரத்தின கம்பளங்கள் விரிக்கப்பட்டு , நான்கு புறத்திலும் ஏழு வண்ணங்கள் கொண்ட திரைகள் தொங்கவிடப்பட்டுள்ளன
விளக்கு, ஏழு திரைகள் ஆகியவற்றை இன்றும் நாம் காணலாம். மற்றைய செய்திகளுக்கு வாரியாரின் நூலில் உங்களுக்கு பதில் கிடைக்கலாம்.
நன்றி