Vallalar Universal Mission Trust   ramnad......
ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த ஊத்தையேன் நாத்தழும் புறவே
ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த
ஊத்தையேன் நாத்தழும் புறவே
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த
வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற
பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற
பகடெனத் திரிகின்ற படிறேன்
நன்றியே அறியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
 கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன்
கள்ளனேன் கள்ளுண்ட கடியேன்
சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்
துட்டனேன் தீதெலாந் துணிந்தேன்
இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ
இந்தநாள் இறைவநின் அருளால்
நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே
நம்பினேன் கைவிடேல் எனையே.