அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்
அடிக்கடி பொய்களே புனைந்தே
எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன்
றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன்
கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன்
கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன்
நடுத்தய வறியேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
Write a comment