Vallalar Universal Mission Trust   ramnad......
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.