அம்பலத் தாடும் அமுதமே என்கோ
அடியனேன் ஆருயிர் என்கோ
எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ
என்னிரு கண்மணி என்கோ
நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ
நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி
என்னைஆண் டருளிய நினையே.
அம்மையே என்கோ அப்பனே என்கோ
அருட்பெருஞ் சோதியே என்கோ
செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ
திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ
தமியனேன் தனித்துணை என்கோ
இம்மையே அழியாத் திருஉரு அளித்திங்
கென்னைஆண் டருளிய நினையே.
அடியனேன் ஆருயிர் என்கோ
எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ
என்னிரு கண்மணி என்கோ
நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ
நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி
என்னைஆண் டருளிய நினையே.
அம்மையே என்கோ அப்பனே என்கோ
அருட்பெருஞ் சோதியே என்கோ
செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ
திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ
தமியனேன் தனித்துணை என்கோ
இம்மையே அழியாத் திருஉரு அளித்திங்
கென்னைஆண் டருளிய நினையே.
Write a comment