Vallalar Universal Mission Trust   ramnad......
அமுதக்காற்று இவ்வண்டத்தில் இரவில் அருணோதயந் தொடங்கி உதயபரியந்தம் வியாபகமாய் இருக்கின்றது.
அமுதக்காற்று இவ்வண்டத்தில் இரவில் அருணோதயந் தொடங்கி உதயபரியந்தம் வியாபகமாய் இருக்கின்றது. அக்காலத்தில் ஜீவர்கள் நன்முயற்சியி லிருப்பது விசேஷ நலம். தேகாதி பிண்டத்தில் மேற்படி அமுதக்காற்று வியாப்பியமாயிருக்கும். ஒருகால் ஒரு க்ஷண நேரம் அந்தக்காற்று வியாபகமாயிருக்குங்கால், ஜீவர்களுக்கு இது வரையில் தாங்களறியாததான கடவுள்விளக்கம் உண்டாகும். மேற்படி காற்று வியாபகம் ஏகதேசமு மில்லாவிடில் ஜீவர்கள் விஷக்காற்றினால் சதா வியாபகமடைதலில், இந்தச் சொற்ப ஜீவிப்பும் விருத்திக்கு வரமாட்டாது. அமுதக்காற்று வியாப்பியமன்றி வியாபகமாயிருக்குங் காலத்தில், ஜீவர்களுக்கு அறிவுவிளக்கம், மனநெகிழ்ச்சி, இந்திரிய அடக்கம், ஈசுரபத்தி முதலியவும் விளங்கும். அக்காலத்தை அமுதக் காற்றின் வியாபக காலமென்று அறியவேண்டும். இதன்றி இருண்மயமாய் முன் பின் தோன்றாது அறிவின்றி யிருக்குங்காலம் விஷக்காற்று வியாபகமாயிருக்குங் காலமென் றறிய வேண்டும்.