DAEIOU - தயவு
திரு அருட்பா .. சந்தி பிரித்து..இலகுவாகப் படிப்பதற்கு வாய்ப்பாக..அருட்பெருஞ்ஜோதி அகவல்..
ஏற்கனவே, சிவகாசி சன்மார்க்க அன்பர் திரு வேம்பார் அவர்கள், திரு அருட்பா பாராயணத் திரட்டு, கீர்த்தனைப் பாடல்கள் ஆகியவை ரூ.10/- என்ற விலையிலும், அதன் பின்னர், அருட்பெருஞ்ஜோதி அகவல் மட்டும் ரூ.1/- என்ற விலையிலும், விற்பனை செய்து சன்மார்க்க உலகத்திற்குப் பெருந்தொண்டு செய்துள்ளார். 

     அடுத்து, அருட்பெருஞ்ஜோதி அகவலை, சந்தி பிரித்து, பாடுவதற்கு இலகுவாக இருக்கும் வண்ணம், சற்றே கூடுதல் விலையில்,  வெளியீடு செய்வதற்கு, அவர் முயற்சி செய்து வருகின்றார். அச்சடித்த பின்னர், அது குறித்த தகவல் வெளியிடப்படும்.