Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
22.5.2022 மதுரை கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் நடத்திய பொதுக் குழுவில் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய சன்மார்க்க விரிவுரை நூல்கள் வினியோகம் செய்யப்பட்டன.
     மதுரை கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான சங்கக் கட்டிடம் உள்ளது. கடந்த 22.5.2022 அன்று காலை 11.00 மணி அளவில், சுமார் 60 உறுப்பினர்கள் அந்தச் சங்கத்தின் பொதுக் குழுவில் கூடிச் சிறப்பித்தனர். மாவட்டத் தலைவர், பொருளாளர், செயலாளர் ஆகியோர் பேசியது போக, மதுரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் தலைவர் திரு அ.இராமானுஜம் மற்றும் அச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு வீ.ஜெயராமன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக அப் பொதுக் குழுக் கூட்டத்தில், கலந்து கொண்டு, சங்கத்தின் வளர்ச்சிக்கு தமது கருத்துக்களை சொற்பொழிவின் மூலம் விளக்கினர்.

    கூட்டத்தின் இறுதியில், திண்டுக்கல் சுவாமிகள் எழுதிய உரை விளக்க நூல்கள், மாநில உறுப்பினர்கள் தயவு சன்மார்க்க களஞ்சியம் 4 பேர்களுக்கும், அனைவருக்கும் திரு அருட்பா ஆடியோ சி.டி.யும், அனைவருக்கும், வடலூர் சத்திய ஞான சபையின் தத்துவ விளக்கம் அடங்கிய நூல், ஆகியவை மதுரை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத் தலைவர் திரு அ.இராமானுஜம் அவர்களால்  வழங்கப்பட்டன.
New Doc 2018-12-15 09.39.21_1.jpg

New Doc 2018-12-15 09.39.21_1.jpg