திண்டுக்கல் நத்தம் ரோடில் அமைந்துள்ள பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், தினந்தோறும், திரு அருட்பா பாராயணம் செய்தல், மதியம் அன்னதானம் செய்தல் ஆகிய பணிகள், தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 3.7.2022 அன்று, மாதப் பூச விழா கொண்டாடப்பட்டது. திரு விஜயராமன் அவர்கள் சுத்த சன்மார்க்க நெறியினை விளக்கி, சொற்பொழிவு நிகழ்த்தினார். அன்றைய நாளில் சுமார் 60 நபர்கள், இந்த வழிபாட்டிலும், அன்னதானத்திலும் பங்கு பெற்றனர்.
20150405_082857.jpg
2 Comments
எனக்கு சுவாமி சரவணானந்தா ஐயாவின் அருட்பெருஞ்சோதி அகவல் உரைவிளக்கம் நூல் வேண்டும். அதேபோல் ஐயாவின் நூல்களின் பட்டியலும், அவை கிடைக்கும் இடமும், பணம் செலுத்தும் முறையும் விளக்கமாக bigboss12021956@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்க வேண்டுகிறேன். தயவு.