பவுர்ணமி விழாவில்வள்ளலார் பட்டிமன்றம்பெங்களூர், ஏப்.29:
பெங்களூர் அகத்தியர் யூனிவர்சல் டிரஸ்ட் சார்பில் மே.1ம் தேதி சித்திரை பவுர்ணமி விழாவில்
வள்ளலார் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.அகத்தியர் யூனிவர்சல் டிரஸ்ட் சார்பில் பத்தாம் ஆண்டு
சித்திரை பவுர்ணமி விழா மே.1ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. அல்சூர் திருவள்ளுவர் சிலை
அருகேயுள்ள மகான் ஒடுக்கத்தூர் மடத்திலுள்ள ஜோதி மண்டபத்தில் மாலை 5மணிக்கு வை.மு.அசோகன்
சுவாமிகளின் சித்தர் சிவவாக்கியர் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும்.அதனைத் தொடர்ந்து சாரம் அடிகள்
தலைமையில் வள்ளலார் பட்டிமன்றம் நடைபெறுகிறது. வள்ளலார் காட்டிய பாதையில் மேலோங்கி நிற்பது,
‘ஜீவகாருண்ய நெறி’ என்ற தலைப்பில் அழகப்பன், வி.எம்.ஜெயபாலனும்., ‘பக்தி நெறி’ என்ற தலைப்பில்
சண்முக செங்கல்வராயன், ஆர்.ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் வாதிடுகின்றனர்.
நிகழ்ச்சியில் பால்ராஜ் வரவேற்கிறார். கங்கப்பா, சந்திரசேகர், வை.மோ.ராம்குமார் ஆகியோர் வாழ்த்துரை
வழங்குகின்றனர். இரவு 8மணிக்கு அன்னதானத்தில் உதவுவோர் கவுரவிக்கப்படுகின்றனர்.
Write a comment