Karunai Sabai-Salai Trust.
Only Vallalar Margam is Greatness. HOW ? - Apj.Arul. in Tamil

சுத்த சன்மார்க்கமே சிறந்தது

- வள்ளலார்

அன்பர்களே !

வணக்கம் .

இன்றைய உலகில் நாம் எங்ஙனம் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.

அவை ;

1. சமய, மத, மார்க்கங்களளைல் பிரிவுப்படுத்தப்பட்டியிருக்கின்றோம். பொது நோக்கம் இன்றி அவையின் கட்டுபாட்டு ஆசாரங்களில் பற்று வைத்துள்ளேளைம்.

2. பொருளளைதார நிலையின் அளவுகோலால் உயர்வு தாழ்வு நமக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3. புலனிச்சையின் அடிப்படையில் நமக்குள் உண்மையாக இல்லாமல்............... இருக்கின்றோம்.

4. ஒரே கடவுளின்உண்மைதெரியாமல் திரிபு நிலையில் உள்ளேளைம்.

5. வளரும் நாடு என்ற பெயரில் விஞ்ஞான வளர்ச்சி கண்டுபிடிப்புகளளைல் இயற்கையின் தன்மையில் மாசுபடுத்தி துன்பம் பெற்று வாழ்கிறோம்.

6. எல்லா ஜீவர்களிடத்தும் தயவு செலுத்தாது இருக்கின்றோம்.

ஆக மேற்படியானவையால் நாம் பிரிக்கப்பட்டு , பேதப்படுத்தப்பட்டு, தாழ்வாக்கப்பட்டு, எதிரியாக்க்பபட்டு மேலும் அவையால் அஞ்ஞானத்தில் அழுந்தியும், இயற்கைச் சீற்றத்தால் துன்பபட்டும் , பெருநோயாலும் அல்லல்படுகிறோம்.

எங்ஙனம் இவை தவிர்த்து பேரின்ப வாழ்வு பெறக் கூடியதாக உள்ளது?

அன்பர்களே!

உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களிலும் வள்ளலாரின் தனிநெறி மார்க்கமான சுத்த சன்மார்க்கத்திலும் சொல்லப்பட்டிருக்கும் ஒழுக்கம், ஆசாரம், மற்றும் கடவுள் அருள் பெற கூறப்பட்டிருக்கும் வழி ஆகியவற்றை பற்றி விளக்கத்தினை வள்ளலாரின் உபதேச குறிப்பின் அடிப்படையில் உள்ளது உள்ளபடியாக கொண்டு இந்நுளைலில் அறிவோம்.


கலை அறிவும் அருள் அறிவும்

பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப்பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்கû ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் பெற முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்த சிவ (அருட்பெருஞ்ஜோதி அருளளைல்) நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்.

மார்க்கங்கள்

சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள் :

v எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிவான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன : தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.

v ஷடாந்தம் - ஷடாந்த சமரச சுத்த சிவசன்மார்க்கம் என்பதில் ஷடாந்தம் என்பது யாது? வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆக ஆறு. மேற்படி அந்தங்களின் அனுபவம் காலம் இடம் முதலிய வேறுபாடுகளளைல் ஏறிக்குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபகமில்லாமல் வேதாந்த சித்தாந்தத்தில் நான்கந்தமும் வியாப்பியமாயிருக்கின்றன. மேற்படி அந்தம் நான்கின் ஐக்கிய விவரம் வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன.

v இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.

v இவற்றிற்கு அதீதம் ஆகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய சமரச சுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம், மேற்குறித்த மார்க்கத்திற்குச் சமய மதங்களளைகிய சன்மார்க்கங்கள் அந்நநியமாய் விளங்கும். அந்நியமல்ல.

சன்மார்க்கங்கள்

சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் என இரண்டு. இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின் வகை ஆறு, தொகை முப்பதாறு, விரிவு அறுகோடி, இதுபோல் மதத்திலும் வகை தொகை விரிவு உள்ளன. மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமய மத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுவரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்த மிருக்கும். அதற்குமேலிரா.

மேற்படி சமயமத சன்மார்க்கங்களில் ஷடாந்த சமரசம் உளதோ வெனில் உளது. யாதெனில் வேதாந்த சித்தாந்த சமரசம். யோகாந்த கலாந்த சமரசம் போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால், சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்க சுத்த சமரச சன்மார்கமாம். இது பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப் பூட்டாகச் சமரச சுத்த சன்மார்க்கமென மருவியது.

சுத்த சன்மார்க்கம்

இதன் தாத்பரியம் யாதெனில், சமரசம் என்பதற்குப் பொருள் எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்திரத்தினின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் குருதுரிய ஸ்தானம். சுத்த சமரச மென்பதற்கு நியாயம். விந்து பரவிந்து இரண்டையும் மறுத்தது சுத்தசிவம் போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்த சிவம் போலும். சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம் பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்கû மறுப்பது சுத்த சன்மார்க்கம். இதன் பொருட்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றே மருவியது. ஒருவாறு ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதன் பூர்வத்தில் சமரச சன்மார்க்கம் ஒன்று, இதன் உத்தரத்தில் சுத்த சன்மார்க்கம் ஒன்று. ஆதலால் ஷடாந்தசமரசம். ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.(அந்நியமல்ல)

சமய சன்மார்க்கம் அனுபவம்

சன்மார்க்கம் என்பதில் வகை தொகை விரிவு அனந்தம். இதன் தாத்பரியம் யாதெனில்; சமய சன்மார்க்கத்தின் பொருள் குணத்தினது லட்சியத்தை அனுசந்தானஞ் செய்வது . குணமென்பது யாது? சத்துவகுணம் . இயற்கை உண்மை ஏகதேசமான சத்துவ குணத்தின் சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம் சத்துவ சம்பந்தமுடைய மார்க்கம் யாதெனில், சத்போதம், சத்கர்மம். சத்சங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சற்சனம், நற்செய்கை முதலியனவும் சத்துவ சம்பந்தம் உடையன இதனியல்பாவன. கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருணியம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம் வாச்சியானுபவம் பெற்றுச் சொரூபானு பவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.

மத சன்மார்க்கம் அனுபவம்

சமயாதீதமாவது மதம். மத சன்மார்க்கத்தின் பொருள் நிர்க்குண லட்சுயஞ் செய்வது. நிர்க்குணமாவது; பூர்வகுணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று லட்சியானுபவம் பெறுதல், யாதெனில், சோகம், சிவோகம், தத்வமசி, சிவத்துவமசி என்னும் வாக்கியத்தின் முக்கியானுபவம். அனுபவம் என்பது யாது?... சத்துவகுண நிர்க்குண லட்சியத்திற்கு மார்க்கம் நான்கு. எவை எனில் சத்துவ குணத்தின் முதல் விûளவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், இரண்டாவது புத்திரனாகப் பாவித்தல், மூன்றாவது சிநேகிதனைப் போலப் பாவித்தல், நான்காவது தன்னைப் போலப் பாவித்தல், இதுஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரானாதல், சிநேகனாதல, கடவுளேதானாதல், இது சத்துவகுண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்க முடிவு.

சத்துவகுண விûளவு என்பதற்குப் பொருள் சத்துவகுணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வசித்தியோடு ஞானசித்தியைப் பெறுதல், நெல்லை விûளத்தான் என்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்த்து அனுபவிக்கிற பரியந்தம் அடங்கியிருப்பது போல் சன்மார்க்கம் என்பது சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாக அடங்கிய பொருùளனக் கொள்க. குண நிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன் மார்க்கம். இம்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.

சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில். சுத்தம் என்பது ஒன்று மல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மதானுபவங்கûளக் கடந்தது. சத்மார்க்கம் என்னும் பொருட்கு அர்த்தம் நான்கு வகை அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம். இதன் முக்கிய லட்சியம் சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலைபெறில் விளங்கும். ஏகதேசத்தில் ஒருவாறு பூர்வம் என்பதற்குப் பொருள்; சிருஷ்டியாதி அனுக்கிரக மீறாகச் செய்யும் பிரமாதி சதாசிவ மீறாகவுள்ள பஞ்ச கிருத்திய கர்த்தர்களின் ஒவ்வொரு கிருத்தியத்தின் விரிவு ஐந்தாக விரிந்த கர்த்தர் பேதம், இருபத்தைந்தாக விரிந்த மஹாசதாசிவானந்த அனுபவ காலத்தை அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய கால அளவு எவ்வளவோ அக்கால அளவு சுத்தமகா சதா சிவானுபவத்தைப் பெற்றுச் சுத்த தேகியாயிருப்பது. சத்தென்பது பரிபாஷை. அது அனந்த தாத்பரியங்கûளக்கொண்டு ஓர் வாக்கிய பதமாய் நின்றது. மார்க்கம் என்பது யாதெனில், துவாரம், வழி. வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கிறமார்க்கம்.

ஆதலால். எவ்வகையிலும் உயர்வுடையது பாவனாதீத அதீதம். குணாதீத அதீதம், லட்சியாதீத அதீதம் வாச்சியாதீத அதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கம்

மேற்படி மார்க்கத்தின் ஏகதேசம் அடியிற் குறிக்கும் அனுபவங்கள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும் வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்கûளச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏம ரவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யஷனுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மேற்குறித்து மார்க்கத்தின் முடிவு ஒருவாறு.

சாதகர் - சாத்தியர்

சத் என்னும் சொல் பரிபாஷை என்பதற்குக் குழுஉக் குறியாக இதன் கீழ்வரும் சில மந்திர வாசக பதவர்ணாதிகû உணர்க. காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாத முதலியனவும், காரிய காரண மாத்திரமாய் விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங், சிவா, வசி, ஓம் முதலியவும், காரிய மாத்திரமாய் விளங்கா நின்ற ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம், ஜோதியுட் ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, தத்துவங்கள் நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும், இவ்வண்ணம் குறித்த பரிபாஷைகளின் உண்மை ஆன்ம அனுபவத்திலும் வகர தகர வித்தையிலும் விளங்கும்.

மேலும், மேற்குறித்த வண்ணம் தத்துவங்கû உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சமாதிசெய்தும், தத்துவச் சேட்டைகû அடக்க விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் சாதகர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள். சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தால், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆரூடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும்.

சன்மார்க்க சங்கம்

சமரச வேத சன்மார்க்க சங்க மென்பதற்குப் பொருள். எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலின் முடிவான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மார்க்கம் நான்காவன. தாசமார்க்கம். சத்புத்திர மார்க்கம், மித்திர மார்க்கம், சன் மார்க்கம்

சத்திய மார்க்கம் - ஷடாந்தங்கள்

ஷடாந்தங்களினது அனுபவம் ஒன்றானாலும் காலம் இடம் முதலியவற்றால் அவை வேறுபடும். ஆதலால் ஷடாந்தங்களு மிப்போது வெளிக்கு வியாபகமில்லாமலிருக்கின்றன. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இந்த 2-ல் வேதாந்தத்தில் போதாந்தமும் யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்தமும் கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. ஆதலால் வேதாந்த சித்தாந்தமே சிறந்தது. வேதாந்த அந்தாதீத சித்தாந்த அந்தாதீத சுத்த சன்மார்க்கமே நீடுழி அழியாத சத்திய மார்க்கம்.

சன்மார்க்க வகைகள்

சன்மார்க்க மென்பது யாது? அது 3 வகைப்படும். சமய சன்மார்க்கம், மத சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம்.

சமய சன்மார்க்கமாவது சத்துவகுண லட்சியானு சந்தானம் சத்துவகுண சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம் சத்துவ சம்பந்தமுடைய சேர்க்கை யெல்லாம் சன்மார்க்கம், அதாவது சத்போதம், சத்கர்மம், சத்^ங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சத்ஜனம், சத்செய்கை முதலியவை சத்துவகுண சம்பந்தமானவையாம், சத்துவகுண இயல்பாவது கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம் இந்திரிய நிக்கிரம், ஜீவகாருண்ணியம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இந்த உண்மையைக்கொண்டு சத்துவ குணத்தின் வாச்சியத்தை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம்.

சன்மார்க்கம் - சத் -

சத்மார்க்கம் என்பதற்குப் பொருள் 4 வகை பூர்வம், பூர்வ பூர்வம், உத்தரம், உத்தரோத்தரம், ஆதலால் இதன் முக்கிய லட்சியம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் பூர்வம் என்பதற்குத்தாத்பரியம் ஒருவாறு சிருஷ்டி ஸ்திதி, சம்மாரம், திரோபவம், அனுக்கிரஹம் எனும் பஞ்சகிருத்தி யங்களுக்குக் கர்த்தாவாக வழங்கி வருகின்ற பிரமாவிஷ்ணு ருத்திரன் மகேசுரன் சதாசிவ மென்னும்தத்துவங்களில், சிருஷ்டியில் சிருஷ்டி, ஸ்திதி, மேற்படி சம்மாரம், சிருஷ்டியில் திரோபவம் மேற்படி அனுக்கிரஹம் இதுபோல் 5 ஆக விரிந்த தத்துவங்கள் 25. இந்த இருபத்தைந்தையும் அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய காலம் எவ்வளவோ அவ்வளவு கால பரியந்தம் மகாசதாசிவ அனுபவத்தைப் பெற்று, சுத்ததேகியாக இருப்பது. வருஷம் தொகை மொத்தம் ஒரு கோடி அறுபது லட்சம்

சத்தென்பது பரிபாஷை குமூஉக்குறிப்பெயர் அனந்த தாத்பரியத்தைக் கொண்டு ஓர் மொழியானது. மார்க்க மென்பது வழி. வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம். ஆகையால் எவ்வகையிலும் உயர்வுடையது சுத்த சன்மார்க்கம்.

சத்மார்க்கத்தின் ஏகதேசமென்பது எந்தக் காலத்தும் எவ்வகைத் தடைகளும் இன்றி அழியாத சுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும் எல்லாம் வல்ல சர்வசித்தியும் பெற்றுக்கொள்வது.

மார்க்கங்களின் விரிவு

சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கம் 36. அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவே மதத்திலும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை உண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா, மூர்த்திகள், ஈசுவரன், பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஓழிய அதற்குமேல் இரா.

சமய மதங்களினும் சமரசம் உண்டு. வேதாந்த சித்தாந்த சமரசம். யோகாந்த கலாந்த சமரசம். போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தரநியாயப்படி, கடைதலைப்பூட்டாக, சமரச சுத்த சன்மார்க்கமென மருவின.

ஆன்மாவுக்கு அனன்னிய அருள் எப்படியோ, அதைப்போல் சுத்த சன்மார்க்கத்துக்கு அனன்னியமாக இருப்பது சர்வ சித்தியாம். சுத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று ஷடாந்தங்களின் பொதுவாகிய சுத்த சன்மார்க்க படிகள் ஷடாந்த சன்மார்க்கம் 1. சமரச சன்மார்ககம் 1. சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3. ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் 3 சிற்சபை 1. பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3, இவைகள் மூன்றுந்தான் படிகளளைக இருக்கும்.

சுத்த தேகத்தினுடைய அனுபவத்தை விரித்தால் விசேஷமாம். சுத்த சன்மார்க்கம் விளங்குங் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாகத் தெரிவிப்பார்.

பரிபாஷையும் சுத்த சன்மார்க்கமும்

பரிபாஷை அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, , , , , நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம், மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டுப் பிரயாசையெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவானாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியா தீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளளைகிய அருட் பெருஞ்சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்

சாத்தியநிலை

சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும், என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்கùளல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப்படிகளளைதலால், அவற்றில் ஐக்கிய மென்பதேயில்லை தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர் மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்திய தேகம் கிடையாது. இது சாதகமார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாûளச்சுத்த சன்மார்க்கம் வழங்கும் போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களளைய் வருவார்கள். சாத்தியர்களளைய் இரண்டறக் கலப்பார்கள்.

hariharan_82
The method followed in answers to the Questiions is very good.
Wednesday, December 16, 2009 at 06:34 am by hariharan_82