Attn: Join Help Line in Whatsapp Group if you have any issues or questions about Vallalar ThiruArutpa App
Anandha Barathi
சீனி. சட்டையப்பர் அவர்களால் எழுதப்பட்ட தைப்பூசம் குறித்த வினா விடை
வணக்கம்,

வடலூர் அண்ணா சீனி. சட்டையப்பர் அவர்களால் எழுதப்பட்டதைப்பூசம் குறித்த வினா விடை, வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

தைப்பூசம் குறித்த பல முக்கியமான கருத்துக்களை தாங்கி வரும் இந்நூலினை அன்பர்கள் அமைதியோடும் ஆர்வத்தோடு இன்னூலைப் படித்து மற்றவருடன் பகிர்ந்து பயன் பெறுக. .

இந்த நூலின் படக்கோப்பு நூலினை இங்கு இணைத்துள்ளோம்.

நன்றி: நடுப்பட்டு தம்பி அருள் ஜோதிக்கு

01.jpg

01.jpg

Download:

Anand Thiagarajan
URGE
Dissemination of vallalar philosophy is a must today, Let us commit ourselves to fullfill his dreams in this universe

Ashok Kumar
அகவல் வரிகள் 11 & 12 விளக்கம்
?si=nMZ5wzySiPPWwmYe

Anand Thiagarajan
எல்லார்க்கும்
எல்லார்க்கும் எல்லாமாய், அண்டத்தின் உட்பொருளை,அகபொருளை வியாபித்து நிற்கும் அருட்பெரும் ஜோதியை பணிந்து வணங்குவோம்

Vallalar Universal Mission Trust   ramnad......
பொதுப் பார்வை...சுய நலமில்லாத.....தான் என்ற ஆணவமில்லாத...மற்றவர்களை ஏமாற்றாத....பொய் கூறாத..
எல்லா உயிரையும் பொதுவாய்ப் பார்ப்பதென்பது தனக்குள்ள ஆகாரத்தைக் கொடுத்துவிட்டுத் தான் பட்டினியிருப்பதல்ல. அப்படி இருந்தால் பாவம். வந்தவர்களின் பசி அறிந்து, தாங்காதவர்களாகில் தனது ஆகாரத்தைக் கொடுத்தும், சகிப்பார்களாகில் எவ்வகையிலாவது முயற்சித்தும் பசியைத் தணிக்கவும். அதற்கும் இடம் இல்லையாகில், பச்சாத்தாபத்துடன் கடவுளைப் பிரார்த்தித்து இன் சொல்லினால் இனிக்கச் செய்து, தான்கெட்டிருப்பதே மேலான புண்ணியம்.

Vallalar Universal Mission Trust   ramnad......
குளிகை மணி ஒன்பதின் விவரம்.....
அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள

பண்டமும் காட்டிய

பரம்பர மணியே

பிண்டமும் அதில்உறு பிண்டமும் அவற்றுள

பண்டமும் காட்டிய

பராபர மணியே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும் முடுகிஅழிந் திடவும்
முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே

இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்

எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்

துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவ Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்
இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்

இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்

மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்

மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக

செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே

திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே

Read more...