Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி அகவல் - உரை விளக்கம்.

அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயிர் வளம்

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்

அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி

ஆகம முடிமேல் ஆரண முடிமேல்

ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்

அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி

ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்

ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி 10

உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்

அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி

ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்

ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி

எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்

அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே

ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி

ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்

ஐயமு நீக்கிய வருட்பெருஞ்ஜோதி 20

ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை

யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி

ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே

ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி

ஒளவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்

அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி

திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்

அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி

சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்

அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 30

சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனும்

அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி

தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்

ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்

ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்

அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்

அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி 40

சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்

அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்

அத்தனிச் சி்ற்சபை யருட்பெருஞ் ஜோதி

தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்

அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி

தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்

அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி

சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்

அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி 50

சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்

ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி

காரண காரியங் காட்டிடு வெளியெனும்

ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்

ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்

ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

என்றா தியசுடர்க் கியனிலை யாயது

வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி 60

சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்

அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி

முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்

அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்

அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி

எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்

அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்

அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 70

சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை

வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்

அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்

அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய

அபயசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி

சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்

ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி 80

மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்

அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்

ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

வாரமு மழியா வரமுந் தருந்திரு

வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்

அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

கற்பம் பலபல கழியினு மழிவுறா

அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி 90

எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய

வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி

ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி

எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி

அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி

தம்பர ஞான சிதம்பர மெனுமோர்

அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி

எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்

அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி 100

வாடுத னீக்கிய மணிமன் றிடையே

ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி

நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே

ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி

கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்

அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய

வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்

கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி 110

எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா

தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி

பிறிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்

னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி

சாதியு மதமுஞ் சமயமுங் காணா

ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி

தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்

அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி

உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த

அநுபவா தீத வருட்பெருஞ்ஜோதி 120

பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே

அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி

உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்

அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி

என்னையும் பணிகொண்டிறவா வரமளித்

தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி

ஓதியோ தாம லுறவெனக் களித்த

ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி

படியடி வான்முடி பற்றினுந் தோற்றா

அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி 130

பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்

அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி

திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்

அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி

மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்

அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி

எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்

அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி

வல்லதா யெல்லா மாகியெல் லாமும்

அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் ஜோதி 140

எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்

அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி

தாங்ககி லாண்ட சராசர நிலைநின்

றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத்

தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி

சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்

அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி

முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்

ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி 150

பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்

அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி

காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்

ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி

இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்

றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

இறவா வரமளித் தென்னைமே லேற்றிய

அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி

நானந்த மில்லா நலம்பெற வெனக்கே

ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி 160

எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை

யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி

மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது

வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி

எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென

அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி

சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழில்

ஐந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

எங்கெங் கிருந்துயி ரேதேது வேண்டினும்

அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி 170

சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்

அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி

சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்

அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி

உபரச வேதியி னுபயமும் பரமும்

அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி

மந்தண மிதுவென மறுவிலா மதியால்

அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி

எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய

வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி 180

செடியறுத் தேதிட தேகமும் போகமும்

அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி

துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை

அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி

பொதுவது சிறப்பது புதியது பழயதென்

றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி

சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை

யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி

ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்

காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி 190

எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்

கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி

எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்

கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி

இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்

கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி

பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்

ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி

தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென

தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி 200

எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்

அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்

ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி

சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே

ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி

சத்திய மாஞ்சிவ சக்தியை யீந்தெனக்

கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி

சாவா நிலையிது தந்தன முனக்கே

ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி 210

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென

ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி

மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்

அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி

தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்

ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி

காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்

ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி

எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா

றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி 220

எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்

அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி

கூறிய கருநிலை குலவிய கீ்ழ்மேல்

ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி

எண்டர முடியா திலங்கிய பற்பல

அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி

சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை

யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி

வாழிநீ டூழி வாழியென் றோங்குபே

ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி 230

மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை

யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி

எச்சநி னக்கில்லை யெல்லாம் பெறுகவென்று

அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி

நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்

றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி

முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு

மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்

ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி 240

கருமசித் திகளின் கலைபல கோடியும்

அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்

ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்

ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை

அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்

அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி 250

சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்

அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி

ஏகசிற் சித்தியே யியலுற வனேகம்

ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி

இன்பசித் தியினிய லேக மனேகம்

அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி

எட்டிரண் டென்பன வியலுமுற் படியென

அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி

இப்படி கண்டனை யினியுறு படியெலாம்

அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி 260

படிமுடி கடந்தனை பாரிது பாரென

அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி

ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த

மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி

யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

ஆதியு மந்தமு மறிந்தனை நீயே

ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்

அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி 270

கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே

அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே

அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே

அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி

பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே

அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

வல்லப சத்திகள் வகையெலா மளித்தென

தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி 280

ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்

ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்

றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி

பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்

மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி

எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும்

அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி

மாண்டுழ லாவகை வந்திளங் காலையே

ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி 290

பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென

தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த

அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி

வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்

ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி

எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை

யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி

நவையிலா வுளத்தி னாடிய நாடிய

வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி 300

கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்

டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி

நன்றறி வறியா நாயினேன் றனையும்

அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி

நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்

ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி

தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்

ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி

எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே

அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி 310

ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்

டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி

தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா

ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே

யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி

உருவமு மருவமு முபயமு மாகிய

அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி

இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி

அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி 320

தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்து

அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி

பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய

அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி

உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை

அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி

வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள்

அருள்விளக்கேற்றிய வருட்பெருஞ் ஜோதி

சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே

அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி 330

விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே

அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி

அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட

அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி

உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே

அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி

ஐம்பூதவியல் வகை

விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்

அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி

விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்

அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி 340

காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்

ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி

காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்

ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

அனலினு ளனலா யனைடு வனலாய்

அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

அனலுறு மனலா யனனிலை யனலாய்

அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி

புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்

அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி 350

புனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்

அனையெனப் பெருகு மருட்பெருஞ் ஜோதி

புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்

அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி

புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்

அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி

விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி

அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி

அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 360

நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி

அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி

ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி

அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணியல் வகை

மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை

யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை

யண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 370

மண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்

அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை

அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்

அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை

யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 380

மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்

டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணியற் சக்திகள் மண்செயற் சக்திகள்

அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சக்திகள்

அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணொளிச் சத்திகள் மன்கருச் சத்திகள்

அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மண்கணச் சத்திகள் வகைபல பலவும்

அண்கொள் வமைத்த வருட்பெருஞ் ஜோதி 390

மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்

அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே

நண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

மண்கரு வுயிர்த்தொகை வமைவிரி பலவா

அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல

அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல

அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 400

மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்

அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி


நீரியல் விரி

நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்

ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீரினிற் பசுமையை நிறுததிய றதிற்பல

வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்

ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீரினிற் சுவைநிலை நிரைத்திற் பல்வகை

ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி 410

நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல

ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல

ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீரிடை யடிநடு நிலையுற வகுத்தன

லார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்

ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல

ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி 420

நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை

ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல

ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல

ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல

ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

நீரியல் பலபல நிறைந்ததிற் பிறவும்

ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி 430

தீயியல் விரி

தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்

ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயினில் வெண்மைத் திகழியல் பலவா

வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்

ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்

ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடை யருநிலை திருநிலை கருநிலை

ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 440

தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல

ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை

ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல

ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்

ஆயுறு வமைத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடைச் சக்திகள் செறிதரு சத்தர்கள்

ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி 450

தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல

ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்

ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்

ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்

ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தீயியல் பலபல செறித்ததிற் பலவும்

ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி 460

காற்றியல் விரி

காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்

ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்

ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றினி லூறியல் காட்டுறு பலபல

ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில

ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல

ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி 470

காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்

ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல

ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடைச் சக்திகள் கணக்கில வுலப்பில

ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன

ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல

ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி 480

காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்

ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடை யுணரியல் கருதிய லாதிய

ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றிடைச் செயலெலொங் கருதிய பயனெலாம்

ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்

தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்

ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி 490

காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்

ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியியல் விரி

வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்

அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்

அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்

அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை

அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி 500

வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே

அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி

வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்

அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியிடை யொன்றே விரித்திற் பற்பல

அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல

அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்

அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 510

வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்

அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

அகப்புற விரி

புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்

அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை

அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்

அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை

அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி 520

கருதக நடுவொடு கடையணைந் தகமுதல்

அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

தணியக நடுவொடு தலையணைந் தகக்கடை

அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்

அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகநடு புறந்தலை யணைந்தகப் புறக்கடை

அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகநடு வதனா லகப்புற நடுவை

அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 530

அகப்புற நடுவா லணிபுற நடுவை

அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி

புறநடு வதனாற் புறப்புற நடுவை

அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புகலரு வகண்ட பூரண நடுவால்

அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்

அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி 540

அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்

அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்

அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

ஐம்பூதக் கலப்பின் விரி

வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்

ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்

அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்

ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 550

புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்

அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத

வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வெளிவகை விரி

உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி

அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்

அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த

அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி 560

சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி

அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பரவெளி யதனைப் பரம்பர வெளியில்

அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பரம்பர வெளியைப் பராபர வெளியில்

அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்

அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்

அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 570

குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்

அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை

அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காலமே முதலிய கருவிகள் கலைவெளி

ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை

அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்

அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி 580

அண்டப்பகுதி விரி

ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்

ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை

அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை

ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை

அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை

அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி 590

தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை

அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை

அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

ஓங்கார சக்திக ளுற்றவண் டங்களை

ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி

சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை

அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நாதமாம் பிரமமும் நாதவண் டங்களும்

ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி 600

பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களை

அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை

அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை

அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை

அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில

அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 610

கடல் வகை

களவில கடல்வகை கங்கில கரையில்

அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி

கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற

அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி

கடல்களு மலைகளு கதிகளு நதிகளும்

அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்

அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மலைவளம்

மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்

அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 620

எண் வகை

ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்

அன்றற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பத்திடை யாயிரம் பகரதிற் கோடி

அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்

ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

கோடியி லனந்த கோடிபல் கோடி

ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வித்தும் விளைவும்

வித்திய லொன்றா விளைவியல் பலவா

அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி 630

விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க

அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி

வித்தும் பதமும் விளையுப கரிப்பும்

அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி

வித்திடை முளையும் முளையிடை விளைவும்

அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்

அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்

அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 640

முளையதின் முளையும் முளையினுண் முளையும்

அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்

அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்

அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

ஒற்றுமை வேற்றுமை யுரிமைகள னைத்தும்

அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய

அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி 650

உறவினி லுறவும் உறவினிற் பகையும்

அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பகையினிற் பகையும் பகையினி லுறவும்

அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்

ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

ஒற்றுமை வேற்றுமை இயல்

துணையு நி்மித்தமுந் துலங்கதி னதுவும்

அணையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்

அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 660

அருவினுள் ளருவும் மருவதி லருவும்

அருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி

கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்

அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

உருவதி லருவும் மருவதி லுருவும்

அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

வண்ணமு வடிவு மயங்கிய வகைபல

அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்

அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி 670

பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்

அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்

அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

மென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும்

அன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி

அடியினுள் ளடியு மடியிடை யடியும்

அடியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்

அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 680

முடியினுண் முடியும் முடியினின் முடியும்

அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

அகப்புறப்பூ

அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை

அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட

அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட

அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற

அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி 690

நால்வகை தோற்ற விரி

பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்

ஆருயி ரமைக்கு வருட்பெருஞ் ஜோதி

ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன

ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல

அலசற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

அறிவொரு வகைமுத லைவகை யறுவகை

அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற

அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி 700

சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல

அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

ஆண்பெண் இயல்

பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்

அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்

அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்

அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்

அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 710

பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்

அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

பெண்ணியன் மனமு மாணிய லறிவும்

அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல்

அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

காத்தருள் விரி

உனற்கரு முயிருள வுடலுள வுலகுள

வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும்

ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி 720

பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்

ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை

ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை

அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்

அகலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை

ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி 730

உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை

அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை

அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

உயிருறு முடலையு முடலுறு முயிரையும்

அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை

ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்

அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி 740

வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர்

ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

இன்புறு சத்தியா லெழின்மழை பொழிவித்

தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்

அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்

அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்

தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி 750

அகப்புற வமுதளித் தைவரா திகளை

அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

தருமக வமுதாற் சத்திசத் தர்களை

அருளினற் காக்கு மருட்பெருஞ் ஜோதி

காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்

ஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

விச்சையை யிச்சையை விளைவித் துயிர்களை

அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை

ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி 760

கலையறி வளித்துக் களிப்பினி லுயிரெலாம்

அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்

அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை

அன்புறக் காத்ரு ளருட்பெருஞ் ஜோதி

கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை

அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்

கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி 770

எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்

கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன

ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி

சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை

அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்

அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்

ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி 780

எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின

அவையெலாந் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

அடக்கியருள் விரி

அண்டத் துரிசையு மகிலத் துரிசையும்

அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்

அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்

அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும்

அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி 790

காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை

ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

பொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம்

அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்

கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்

அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை

அத்தகைய யடக்கு மருட்பெருஞ் ஜோதி 800

நால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில்

ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்

ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்

ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி

மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்

ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி

தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்

அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி 810

சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை

அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி

திரை விளக்கம்

கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்

அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

பேருறு நீலப் பெருந்திரை யதனால்

ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

பச்சைத் திரையாற் பரவெளி யதனை

அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

செம்மைத் திரையாற் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி 820

பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை

அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை

அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

கலப்புத் திரையாற் கருதனு பவங்களை

அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்

அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்

அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி 830

திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே

அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

தோற்றமா மாயைத் தொடர்பறுத தருளி

னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை

அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி

எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே

அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி

விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை

அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி 840

சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை

அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி

மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே

அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே

அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்

அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்

அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி 850

சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க்கின்பம்

அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை

அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி

காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை

ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி

அட்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்

அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை

அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி 860

தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை

அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை

ஐந்தொழி லாதிசெய்யருட்பெருஞ் ஜோதி

இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்

அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி

செத்தவ ரெல்லாஞ் சி்ரித்தாங் கெழுதிறல்

அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி

இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட

அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி 870

செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட

அத்திற் லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

சித்தெல்லாம் வல்ல திறலளித் தெனக்கே

அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி

ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது

ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே

ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல

ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே

ஒன்றினு லொன்றுள வொன்றினி லொன்றில

ஒன்றுற வொன்றிய வொன்றெனு மொன்றே 880

மெய்ப்பொருள்

களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி

விளங்கவென் னுளளே விளங்குமெய்ப் பொருளே

மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்

ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே

எழுநிலை மிசையே யின்புரு வாகி

வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே

நவநிலை மிசையே நடுவுறு நடுவே

சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே

ஏகா தசநிலை யாததி னடுவே

ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே 890

திரையோ தசநிலை சிவவெளி நடுவே

வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே

ஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற்

பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே

எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே

எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே

மனாதிகள் பொருந்தா வானடு வானாய்

அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே

தானொரு தானாய்த் தானே தானாய்

ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே 900

அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்

பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா

உயலுற விளங்கு மொருதனிப் பொருளே

அருவினு ளருவா யருவரு வருவாய்

உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே

அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்

உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே

பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா

யொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே 910

ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு

கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே

கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்

ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே

அறிவுறு சி்த்திக ளனந்தகோ டிகளும்

பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே

வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க

ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே

பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க

உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே 920

பராபர இயல்

பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே

பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே

பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே

பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே

பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே

பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே

பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே

தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே

வரம்பரா பரமே வணம்பரா பரமே

பரம்பரா பரமே பதம்பரா பரமே 930

பதவியல்

சத்திய பதமே சத்துவ பதமே

நித்திய பதமே நிற்குண பதமே

தத்துவ பதமே தற்பத பதமே

சித்துறு பதமே சிற்சுக பதமே

தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே

அம்பரம் பதமே யருட்பரம் பதமே

தந்திர பதமே சந்திர பதமே

மந்திர பதமே மந்தண பதமே

நவந்தரு பதமே நடந்தரு பதமே

சிவந்தரு பதமே சிவசிவ பதமே 940

சிவரகசியம்

பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே

பிரமநிற் குணமே பிரமசிற் குணமே

பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்

பரமமே பரம பதந்தருஞ் சிவமே

அவனோ டவளா யதுவா யலவாய்

நவமா நிலைமிசை நண்ணிய சிவமே

எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்

செம்பொரு ளாகிய சிவமே சிவமே

ஒருநிலை யிதுவே வுயிர்நிலை யெனுமொரு

திருநிலை மேவிய சிவமே சிவமே 950

மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு

தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே

புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்

சிரமுற நாட்டிய சிவமே சிவமே

கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்

செல்வமு மளித்த சிவமே சிவமே

அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாயத்

தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே

சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்

சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே 960

எங்கே கருணை யியற்கையி னுள்ளன

அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே

யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்

சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே

பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்

செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்

பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே

உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே 970

பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல

உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே

உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே

உயிர்நலம் பரவுகென்றுரைத்தமெய்ச் சிவமே

இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்

உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே

அருளலா தணுவு மசைந்திடா ததனால்

அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச்சிவமே

அருளுறி னெல்லா மாகுமீ துண்மை

அருளுற முயல்கவென் றருளிய சிவமே 980

அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்

இருணெறி யெனவெனக் கிளம்பிய சிவமே

அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்

தெருளிது வெனவே செப்பிய சிவமே

அறிளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்

மருளறி வென்றே வகுத்த மெய்ச் சிவமே

அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்

மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே

அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே

றிருட்பே றருக்குமென் றியம்பிய சிவமே 990

அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்

பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே

அருளறி யார்தமை யறியார் எம்மையும்

பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே

அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை

பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே

அருள்வடி வதுவே யழியாத் தனிவடி

வருள்பெற முயலுகென் றருளிய சிவமே

அருளே நம்மிய லருளே நம்முரு

அருளே நம்வடி வாமென்ற சிவமே 1000

அருளே நம்மடி யருளே நம்முடி

அருளே நம்நடு வாமென்ற சிவமே

அருளே நம்மறி வருளே நம்மனம்

அருளே நங்குண மாமென்ற சிவமே

அருளே நம்பதி யருளே நம்பதம்

அருளே நம்மிட மாமென்ற சிவமே

அருளே நந்துணை யருளே நந்தொழில்

அருளே நம்விருப் பாமென்ற சிவமே

அருளே நம்பொரு ளருளே நம்மொளி

அருளே நாமறி வாயென்ற சிவமே 1010

அருளே நங்குல மருளே நம்பெயர்

அருளே நாமறி வாயென்ற சிவமே

அருளே நஞ்சுக மருளே நம்பெயர்

அருளே நாமறி வாயென்ற சிவமே

அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை

அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே

அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை

அருளர சியற்றுகென் றருளிய சிவமே

சிவபதி

உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள்

வள்ளல்சிற் றம்பலம வளர்சிவ பதியே 1020

நிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனத்

தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே

சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்

சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே

ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்

கைவரப் புரிந்த கதியே பதியே

துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த

இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே

சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை

ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே 1030

கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி

வையமேல் வைத்த மாசிவ பதியே

இன்புறச் சிறியே னெண்ணுதோ றென்ணுதோ

றன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே

பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை

மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே

உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது

குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே

அருட்குரு

பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத்

திரமுற வருளிய திருவருட் குருவே 1040

மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்

திதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே

கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்

குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே

பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்

மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே

பிரம ரகசியம் பேசியென் னுளத்தே

தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே

பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே

வரமுற வளர்த்து வயங்குசற் குருவே 1050

சிவரக சியமெலாந்த தெரிவித் தெனக்கே

நவநிலை காட்டிய ஞானசற் குருவே

சத்திய லனத்துஞ் சித்தியன் முழுதும்

அத்தகை தெரித்த வருட்சிவ குருவே

அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே

பிறிவற விளங்கும் பெரியசற் குருவே

கேட்பவை மெல்லாங் கேட்பித் தெனுள்ளே

வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே

காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே

மாண்பத மளித்து வயங்குசற் குருவே 1060

செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே

உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே

உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்

பண்பினில் விளங்கும் பரமசற் குருவே

சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்

தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்

மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே

எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்

வல்லா னெனவெனை வைத்தசற் குருவே 1070

உயிர்த்தாய்

சீருற வருளாந் தேசுற வழியாப்

பேருற வென்னைப் பெற்றநற் றாயே

பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்

பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே

ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்

ஈன்றமு தளித்த வினியநற் றாயே

பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்

வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே

தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை

உளந்தெளி வித்த வொருமைநற் றாயே 1080

அருளமு தேமுத லைவகை யமுதமும்

தெருளுற வெனக்கருள் செல்வநற் றாயே

இயலுமு தேமுத லெழுவகை யமுதமும்

உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே

நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்

பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே

மற்றுள வமுத வகையெலா மெனக்கே

உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே

கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே

அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே 1090

துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்

கெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே

சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே

சத்தியை யளித்த தயவுடைத் தாயே

சத்திநி பாதந் தனையளித் தெனைமேல்

வைத்தமு தளித்த மரபுடைத் தாயே

சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்

சித்தியை யளித்த தெய்வநற் றாயே

தன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே

என்னைமே லேற்றிய வினியநற் றாயே 1100

வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே

யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே

எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்

கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே

இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந்

தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே

என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்

தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே

தெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத்

தரியா தணைத்த தயவுடைத் தாயே 1110

சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்

கனவினும் பிரியாக் கருணைநற் றாயே

தூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்

ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே

உயிர்த் தந்தை

துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப

இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே

எல்லா நன்மையு மென்றெனக் களித்த

எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே

நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய

தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே 1120

அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே

பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே

புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த

தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே

அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி

சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே

இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே

துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே

ஆதியீ றறியா வருளர சாட்சியிற்

ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே 1130

எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்

பட்டிமண் டபத்திற் பதித்த மெய்த் தந்தையே

தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்

செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே

தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்

என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே

தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்

என்வடி வாக்கிய என்றனித் தந்தையே

தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்

என்சித் தாக்கிய என்றனித் தந்தையே 1140

தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்

என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே

தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை

என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே

தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்

என்னையு மொன்றென வியற்றிய தந்தையே

தன்னிய லென்னியல் தன்செய லென்செயல்

என்ன வியற்றிய வென்றனித் தந்தையே

தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை

என்ன வியற்றிய வென்றனித் தந்தையே 1150

சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்

றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே

மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே

இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே

உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை

யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே

துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்

பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே

ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த

பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே 1160

எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்

அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே

இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய

தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே

உயிர்த் தணை

பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்

சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே

தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்

கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே

துறையிது வழியிது துணிவிது நீசெயும்

முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே 1170

எங்குறு தீமையு மென த்தொட ராவகை

கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே

வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே

யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே

இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா

தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே

உயிர் நட்பு

அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்

னுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே

அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே

இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே 1180

நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே

வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே

உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்

டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே

செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த

குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே

குணங்குறி முதலிய குறித்திடா தெனையே

அணங்கறக் கலந்த அன்புடை நட்பே

பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்

கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே 1190

சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும்

கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே

உயிர் உறவு

களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்

கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே

தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா

வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே

மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்

எனக்குற வாகிய என்னுயி ருறவே

துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா

தென்னுற வாகிய வென்னுயி ருறவே 1200

இயற்கை உண்மை

என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய்

என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே

அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்

இனைத்தென வறியா வென்றனிச் சத்தே

பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்

இதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே

ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்

ஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே

சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே

இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே 1210

துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென

உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே

அன்றத னப்பா லதன்பரத் ததுதான்

என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே

இயற்கை விளக்கம்

என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்

என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே

சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்

இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே

தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்

இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே 1220

படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்

இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே

மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்

ஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே

உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்

இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே

அறிவவை பலவா யறிவன பலவாய்

எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே

நினைவவை பலவாய் நினைவன பலவாய்

இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே 1230

காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்

ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே

செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்

எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே

அண்ட சராசர மனைத்தையும் பிறவையும்

எண்டற விளக்கு மென்றனிச் சித்தே

எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட

எல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே

இயற்கை இன்பம்

ஒன்றதி லொன்றென் றுரைக்கவும் படாதாய்

என்றுமோர் படித்தா மென்றனி யின்பே 1240

இதுவது வென்னா வியலுடை யதுவாய்

எதிரற நிறைந்த வென்றனி யின்பே

ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்

ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே

அறிவுக் கறிவினி லதுவது வதுவாய்

எறிவற் றோங்கிய வென்றனி யின்பே

விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை

யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே

இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும்

எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே 1250

முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்

எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே

எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்

எல்லா வின்புமா மென்றனி யின்பே

அருளமுதம்

கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்

விரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்

குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி

மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய

உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா

வணமுறு மின்ப மயமே யதுவாய்க் 1260

கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்

நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்

உள்ளதா யென்று முள்ளதா யென்னுள்

உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்

எல்லா மினிப்ப வியலுறு சுவையளித்

தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்

சாகா வரமுந் தனித்தபே ரறிவும்

மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்

செயற்கரு மனந்த சித்தியு மின்பமும்

மயக்கறத் தருந்திறல் வண்மையை தாகிப் 1270

பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி

ஆரண முடியுட னாகம முடியுங்

கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு

நடந்திகழ் கின்றமெய்ஞ் ஞானவா ரமுதே

சத்திய வமுதே தனித்திரு வமுதே

நித்திய வமுதே நிறைசிவ வமுதே

சச்சிதா னந்தத் தனிமுத லமுதே

மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே

ஆனந்த வமுதே யருளொளி யமுதே

தானந்த மில்லாத் தத்துவ வமுதே 1280

நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே

சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே

பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே

கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே

அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்

உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே

பனிமுத னீக்கிய பரம்பர வமுதே

தனிமுத லாய சிதம்பர வமுதே

உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே

அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே 1290

மணி

அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள

பண்டமுங் காட்டிய பரம்பர மணியே

பிண்டமுங் மதிலுறு பிண்டமு மவற்றுள

பண்டமுங் காட்டிய பராபர மணியே

நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற

அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே

விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்

கண்பெற நடத்துங் ககனமா மணியே

பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்

சார்புற நடத்துஞ் சரவொளி மணியே 1300

அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்

கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே

சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்

விராவியுள் விளங்கும் வித்தக மணியே

மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்

தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே

தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா

வாழ்வெனக் களித்த வளரொளி மணியே

நவமணி முதலிய நலமெலாந் தருமொரு

சிவமணி யெனுமருட் செல்வமா மணியே 1310

மந்திரம்

வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து

நான்பெற வளித்த நாதமந் திரமே

கற்பம் பலபல கழியினு மழியாப்

பொற்புற வளித்த புனிதமந் திரமே

அகரமு முகரமு மழியாச் சிகரமும்

வகரமு மாகிய வாய்மைமந் திரமே

ஐந்தென வெட்டென வாறென நான்கென

முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே

வேதமு மாகம விரிவுக ளனைத்தும்

ஓதநின் றுலவா தோங்குமந் திரமே 1320

மருந்து

உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு

மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே

சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்

தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே

இறந்தவரெல்லா மெழுந்திடப் புரியுஞ்

சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்

உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே 1330

என்றே யெனினு மிளமையோ டிருக்க

நன்றே தருமொரு ஞானமா மருந்தே

மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்

நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே

சிற்சபை நடுவே திருநடம் புரியும்

அற்புத மருந்தெனு மானந்த மருந்தே

மாற்றறியாப் பொன்

இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்

தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்

மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்

ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க் 1340

காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்

ஆட்சிக் குரியபன் மாட்சி முடைத்தாய்

கைதவர் கனவினுங் காண்டற் கரியதாய்ச்

செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்

உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே

வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே

புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்

வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே

மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்

இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே 1350

எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா

தடுத்தடுத் தோங்குமெய் யருளுடையப் பொன்னே

தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக்

கிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே

எண்ணிய தோறுமியற்றுக வென்றெனை

யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே

நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்

போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே

எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்

பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே 1360

விண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப்

புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே

நால்வகை நெறியினு நாட்டுக வெனவே

பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே

எழுவகை நெறியினு மியற்றுக வெனவே

முழுவகை காட்டி முயங்கிய பொன்னே

நல்நிதி

எண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப்

புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே

ஊழிதோ றூழி யுலப்புறா தோங்கி

வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே 1370

இதமுறு வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்

குதவினு முலவா தோங்குநன் னிதியே

இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்

றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே

எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை

அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே

அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே

கற்பனை கடந்த கருணைமா நிதியே

நற்குண நிதியே சற்குண நிதியே

நிற்குண நிதியே சிற்குண நிதியே 1380

சோதிமலை

பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே

வளமெலா நிறைந்த மாணிக்க மலையே

மதியுற விளங்கு மரகத மலையே

வதிதரு பேரொளி வச்சிர மலையே

உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே

துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே

இயற்கைப் பொருண்மை

புற்பதந் திரைநுரை புரைமுத லிலதோர்

அற்புதக் கடலே யமுதத்தண் கடலே

இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய

அருட்பெருங் கடலே யானந்தக் கடலே 1390

பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே

உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே

என்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள

நன்றுற விளங்கிய நந்தனக் காவே

சேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர்

ஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே

கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே

மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே

களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே

இளைப்பற வாய்த்த வின்சுவை யுணவே 1400

தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே

தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே

நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே

வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே

கட்டுமாம் பழமே கதலிவான் பழமே

இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே

புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே

கனியெலாங் கூட்டிக் கலந்தீஞ் சுவையே

இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே

பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே 1410

சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே

ஏலவே நாவுக் கினியகற் கண்டே

உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே

கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே

நவையிலா தெனக்கு நண்ணிய நறவே

சுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே

பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே

இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே

உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி

மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே 1420

இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்

உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே

யாழுறு மிசையே யினியவின் னிசையே

ஏழுறு மிசையே யியலரு ளிசையே

திவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே

அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே

நாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே

வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே

நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே

சன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே 1430

நம்புறு மாகம நவிற்றிய பாட்டே

எம்பல மாகிய வம்பலப் பாட்டே

என்மனக் கண்ணே என்னருட் கண்ணே

என்னிரு கண்ணே யென்கணுண் மணியே

என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே

என்பெருந் திறலே யென்பெருஞ் செயலே

என்பெருந் தவமே என்றவப் பலனே

என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே

என்பெரு வாழ்வே யென்றன்வாழ் முதலே

என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே 1440

என்பெரு நலமே யென்பெருங் குலமே

என்பெரு வலமே யென்பெரும் புலமே

என்பெரு வரமே யென்பெருந் தரமே

என்பெரு நெறியே யென்பெரு நிலையே

என்பெருங் குணமே என்பெருங் கருத்தே

என்பெருந் தயவே யென்பெருங் கதியே

என்பெரும் பதியே யென்னுயி ரியலே

என்பெரு நிறைவே யென்றனி யறிவே

அமுத சித்தி

தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்

மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட 1450

என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட

மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட

இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்

உரத்திடை பந்தித் தொருதிரளாயிட

மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்

உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட

தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட

உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்

கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட 1460

வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்

கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட

மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்

கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட

மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட

இனம்பெறு சித்த மியைந்து களித்திட

அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்

சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட

அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்

பொறியுறு மான்மதற் போதமும் போயிடத் 1470

தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்

சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட

உலகெலாம் விட முளவெலா மறைந்திட

அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட

என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட

என்னுளத் தோங்கிய என்றனி யன்பே

பொன்னடி கண்டருட் புத்தமு துணவே

என்னுறத் தெழுந்த வென்னுடை யன்பே

தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்

என்னைவே தித்த என்றனி யன்பே 1480

என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடைய யன்பே

என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து

என்னுளே கனிந்த வென்னுடைய யன்பே

தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே

என்னுளே நிறைந்த என்றனி யன்பே

துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை

யின்புறு வாக்கிய என்னுடை யன்பே

பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா

என்னுளங் கலந்த என்றனி யன்பே 1490

தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி

என்வசங் கடந்த என்னுடை யன்பே

தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே

என்னுளே பொங்கிய என்றனி யன்பே

நித்திய விளக்கு

அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்

இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே

துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்

லின்புற வென்னுறத் தேற்றிய விளக்கே

மயலற வழியா வாழ்வுமேன் மேலும்

இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே 1500

இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட

நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே

கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட

உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே

தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட

ஏற்றிய ஞான வியலொளி விளக்கே

ஆகம முடிமே லருளொளி விளங்கிட

வேகம தறவே விளங்கொளி விளக்கே

ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி

காரியம் விளக்குமோர் காரண விளக்கே 1510

நிறைவழி

தண்ணிய வமுதே தந்தென துளத்தே

புண்ணியம் பலித்த பூரண மதியே

உய்தர வமுத முதவியென் னுளத்தே

செய்தவம் பலித்த திருவளர் மதியே

பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத

நிதியெலா மளித்த நிறைதிரு மதியே

பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று

மேல்வெளி விளங்க விளங்கிய மதியே

கருணைமழை

உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட

வயங்கிய கருணை மழைமொழி மழையே 1520

என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப

மன்னிய கருணை மழைபொழி மழையே

உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி

வளங்கொளக் கருணை மழைபொழி மழையே

நலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே

மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே

தூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல்

வாயமையாற் கருணை மழைபொழி மழையே

அருட்பெருஞ்ஜோதி

வெம்மல விரவது விடிதரு ணந்தனிற்

செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே 1530

திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே

வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே

அலகிலாத் தலைவர் களரசுசெய் தத்துவ

உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே

முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே

என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே

ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த

ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே

உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட

வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே 1540

நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை

வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே

வேதமு மகாம விரிவும் பரம்பர

நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே

எண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள்

நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே

வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு

நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே

இரவொடு பகலிலா வியல்பொது நடமிடு

பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே 1550

வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி

பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே

சமரச சத்தியச் சபையி னடம்புரி

சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே

அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி

மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே

அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி

வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்

ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி 1560

என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே

அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து

உலகியல் சிறிது முளம்பிடி யாவகை

அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்

சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா

துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து

சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்

சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்

இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும் 1570

ஓருரு வாக்கிய னுன்னிய படியெலாஞ்

சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா

அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை

அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி

வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்

அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட

இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி 1580

மூவரும் தேவரு முத்தருஞ் சித்தரும்

யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே

சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்

விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க 1590

சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக

உத்தம னாகுக வோங்குக வென்றனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி 1596

திருச்சிற்றம்பலம்

*****

அருட்பெருஞ்ஜோதி அகவல்

உரை விளக்கம்

முன்னுரை

    1. எல்லாம் வல்ல கடவுள் உண்மையை, உள்ளபடி கண்டு அடைந்து அனுபவித்த அருட்பேரின்பத்தை, அன்பர் உலகம் ஏற்றுப் பெரும் பயனுற நம் திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளியுள்ள அருட்பெருஞ் செய்யுள் இதுவாகும். இந்தப் பெருஞ் செய்யுளின் ஒப்பற்ற மெய்ப்பொருள் அந்த அருட்பெருஞ் ஜோதியன்றி வேறன்றாம். ஆகையால், அருட்பெருஞ்ஜோதிக் கடவுளின் உண்மை விளக்கத்தையும், போற்றிப் பெறும் அருளின்ப வாழ்வையும் கூட்டி வைப்பதுதான் இவ் அகவலின் அனுபவப் பொருளாகும். இதற்கெல்லாம் அருள் ஒளியின் துணையே முக்கியமானது; புறத்துணைக் கருவிகள், அதாவது, இலக்கண இலக்கிய ஆதரவுகள் இன்றியமையாதன வல்ல: எனினும் கூட அவைகள் தாமே முன்னுற்றுப் பொருந்தலும் திருவருட் சம்மதமேயாம்.

    2. கடவுள் உண்மையை உள்ளுற யோகிருந்து கண்டவன் பழந்தமிழன். அவ்வுண்மையை அடிப்படையாய் வைத்தே தமிழ் மொழியையே உருவாக்கிவிட்டான். அவன் செய்த தமிழ்க் கற்பனைக் கடவுள்தான் சிவம் ஆம். இச் சிவம் என்னும் பெயர் பெறாத அக் கடவுளின் விளக்கம், முதலில் எங்கும் நிறை அகண்ட பெருஞ்ஜோதியாகக் காணப்பட்டிருந்தது. அந்தப் பேரொளியைக் கந்தழி (அடிமுடி காணவொண்ணா அழல் வடிவம்) என்று புருவநடுக் கண்ணின்று கண்டிருந்தான் அப்பழையோன். இக் காட்சியைக் கண்டது, அந்நெற்றி நடுக் கண்ணுக்கு மெய்யொளி கொடுக்கும் சிரநடுதிகழ் ஒரு சிற்றணு ஆகும். இந்த அணு ஒளி, கந்தழி ஜோதியின் சிறு கூறேயாம். இக் கடவுட் ஜோதி அணுதான், இம் மனிதனின் உடலையும் உயிரையும், மெய்யறிவையும் ஏற்று, யாவையும் கண்டு அனுபவகிக்கின்றதாம். எங்கும் பரிபூரணமாயுள்ள கடவுள், ஒவ்வொரு சிற்றான்ம அணுவிலும் நீக்கமற இருந்து, பக்குவ மனித நிலையில் தன் உண்மையைக் கண்டிருப்பதாய் அறிகின்றோம். இதுதான் கற்பனையற்ற கடவுள் நிலையும், இந்த மனிதன் நிலையுமாகும். இதுவே அருட்பெருஞ்ஜோதி நிலை.

    3. இதுவரையும் கடவுள் நிலையை அதற்கு அயலான இடத்திலிருந்து கண்டுவந்த மனிதன், தான் வேறு, அது (கடவுள்) வேறு என எண்ணி, அத்தோடு ஒன்றுபட முயன்று ஒழிந்தான். இக் கடவுள் அனுபவம் பெறுவதற்கே சிவமாதி தெய்வக் கற்பனைகளும், வேதாந்த சித்தாந்தங்களும் தோற்றுவிக்கப்பட்டனவாம். திருமந்திர சாத்திரத்தும், திருவாசக தோத்திரத்தும் சிவபதியைச் சார்ந்து கொள்ளும் உபாயம் தெளிவிக்கப்பட்டுள்ளனவாம். இவற்றின் முடிவு, கடவுட் ஜோதியைக் காட்டி அதிலே கலந்து மறையச் செய்வதாய் இருப்பது. இந்நிலையில் மனிதனுக்கு உலகியல் வாழ்வு இல்லாது போய்விடுகின்றது. இம் மனிதனாக விளங்கின கடவுளோ, தன் அருளால் என்றென்றும் வாழ்ந்து கொண்டும் உலகை எல்லாம் ஆண்டு கொண்டும் இருக்கின்றார். ஆகையால், அகத்தில் ஒடுங்கியொழியாது, அந்நிலையினின்று அருள்மய வாழ்வு வாழ்கின்ற மனிதன்கூட என்றென்றும் அக் கடவுள்மய அருள் இன்ப வாழ்வில் விளங்கக்கூடியவனாகி விடுகின்றான் என்பதுதான் நம் வள்ளல் கண்ட அக அனகநெறி முறையாம். இதுவே சுத்த சன்மார்க்கமாகும்.

    4. திருவருட்பாவின் ஆறாம் திருமுறை சுத்த சன்மார்க்கத்தையே வழங்க வந்தது. சுத்த மனோ நிலையில் புருவமத்தி நின்று அருட்ஜோதிபதியைப் போற்றிப் போற்றி உட்கூடி, அன்பாற் கரைந்து கரைந்து அருள் ஒளி பொங்கி வழிந்து நிரம்பப்பெற்று வாழவைப்பது இந்த அகவல் துதிப்பாடல். சுத்த சன்மார்க்க அன்பர்கள் எல்லாம் இந்நெறி கண்டுகொண்டு உய்தல் வேண்டும்; பழையனவாகிய நெறிகளில் உழன்று கொண்டிருக்கக்கூடாது. அருட்பெருஞ்ஜோதி வாழ்க.

    5. சத்திய ஞான சபையில் வளர் அருட்பெருஞ்ஜோதியைப் போற்றிப் போற்றி அதுவாகி நிற்கப் பழகுதல் வேண்டும். அப்படி இருந்து கொண்டு தான் அனுபவமுறை வாழத் ‘தயவு’ செய்து கொண்டு விளங்கவே, ஆணை செய்துள்ளார் நம் வள்ளற் பெருமான். ஆகவே, தயவுணர்வில் இருந்து உரையில் வெளிப்படுத்தப் பெறுகின்றது இவ்வுரை விளக்கநூல்.

    6. இனி அருட்பெருஞ்ஜோதி அகவலின் விளக்கத்தைக் காண்போம். இரண்டிரண்டி அடிகளாக எடுத்துக்கொண்டு கருத்தினை விரித்துக் கூறுவோம்.

    *****

    1. அருட்பெருஞ்ஜோதி

1. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

2. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

(உரை விளக்கம்) : அருட்பெருஞ் ஜோதி என்ற சொல், பொருள் விளங்காத ஒன்றாக இல்லைபோல் தோன்றுகிறது. ஆனால் அதன் உண்மை விளக்கம் பெரிதும் பெருமையுடைத்தாகும். ஜோதி என்றால், நிறையொளியாம். பெருஞ் ஜோதியாவது, மிகப் பெரிதாய் நிறைவுற்றதாய் உள்ள பேரொளியாம். உலகம் கண்ட பெரிய ஜோதி விண்மணியாம் சூரியனே. வான் விளங்கு விண்மீன் ஒவ்வொன்றும் பெரிய பெரிய ஜோதி என்பது அறிவியல் அனுபவம். ஆனால் இந்த ஜோதிகள் எல்லாம் தோற்றக் காரணமான நிறைபெருஞ் ஜோதியை “கேலக்ஸ்சி” (galaxy) என்கின்றனர். இந்நிறை ஜோதிக்கும் இதுபோன்ற பல பேரொளி நிலைகட்கும் இடம் கொடுத்துள்ள அகண்ட பெருவெளி முற்றும் நீக்கமற நிறைந்து நின்று எல்லா ஜோதிகளின் தோற்ற ஒடுக்கங்களுக்கும் காரணமாயுள்ளதுதான் நமது அருட்பெருஞ் ஜோதி ஆகும். இந்த அருட்பெருஞ் ஜோதியாம் இறை ஒளி அளப்பரிய அகண்ட பெருவெளி எல்லாம் செறிந்து இயற்கையுண்மையாய் இருந்துகொண்டும், இயற்கை விளக்கத் தோற்றங்களாய் வெளிக்காட்டி மறைந்துகொண்டும், இயற்கை இன்பத்தை, முடிவில், நிறைமனித வடிவில் அனுபவ பூர்வமாய் வழங்கிக் கொண்டும் இருக்கின்றதாம். இவனது அனுபவத்தில் தான் இந்த அருடபெருஞ்ஜோதியின் நிறை உண்மை விளக்கம் கண்டு கொள்ளப்படுகின்றது.

மேற்படி அருட்பெருஞ்ஜோதி நான்கு நிலை கொண்டதாய்க் குறிக்கப்படுகின்றது.

(புறத்தே)

1. வான் வெளி நிறை மின் காந்த ஒளி நிலை.

(வான் கலந்த பெருஞ்ஜோதி அக்கினி நிலை)

2. விண்மணியாம் ஞாயிறு ஜோதி நிலை.

3. தண்மதி நிறைகலைச் சந்திர ஜோதி நிலை

4. தீபச்சுடர் விளக்கின் ஒளி நிலை

இவை போன்று பக்குவ மனிதனின் அக அனுபவத்தே நான்காய் விளங்கும் ஜோதி நிலையுளவாம். அவையாவன; (புறமிருந்து அகம் நோக்கிச் செல்லும்போது)

1. தேகேந்திரிய விளக்க ஒளிநிலை

2. மனோகரண விளக்க ஒளிநிலை

3. ஜீவ உணர்வு விளக்க ஒளிநிலை

4. ஆன்ம ஞான விளக்க ஒளிநிலை

இந்த நானிலை அனுபவம் உண்டாகவேண்டி, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நெறிகளை வகுத்து, அவற்றின் அடைவாக, சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய பதவி விளக்கங்களையும் வழங்கினர் ஆன்றோர். இந் நானிலை முடிவே, நான்கு கால் ஒன்றாவது போல் முழு நிலை அனுபவத்தைக் கூட்டி வைப்பதாய்க் கொள்ளப்பட்டதாம். இதனையே முடிவாகக் கொண்டதால் இறையொளி கண்ட ஒருவன் அவ்வொளியில் நாட்டம் வைத்துக் கலந்து மறைந்தே போனான். அப்படி மறைந்து ஒழியாது, வாழ்வு பெற்று விளங்கவே நம் அக அனக சுத்த சன்மார்க்கம் திருவருளால் வெளியாக்கப்பட்டுள்ளது.

சுத்த சன்மார்க்கி, தயவோடு கூடிய சத்விசாரத்தால் அகம் விளங்கும் அருள் இறை ஒளியை ஆன்ம ஆலயமாகிய சத்திய ஞானசபையில் அருட்பெருஞ் ஜோதியாகக் கண்டு கலந்து அதுவாகி நின்று, அவ்வருட்பெருஞ் ஜோதியையே விரிவு செய்து ஜீவனிலும், கரணத்திலும், இந்திரிய தேகத்திலும் நிரம்பிடக் கொண்டு வாழ்வதால் அருட்பெருஞ் ஜோதியின் முழுநிலை அனுபவமும் பெற்று முடிவிலாதென்றும் விளங்கலாம் என்பது நம் வள்ளலார் கண்ட உண்மையாகும். ஆகவே இந்தக் கடவுட் பேறு எய்தும்படி திருவாய் மலர்ந்து அருளப்பெற்ற இவ் அருட்பெருஞ் ஜோதி அகவலின் தொடக்கத்தே இந்த நான்கு அருட்பெருஞ் ஜோதியைக் காண்கின்றோம். அடுத்து வரும் அடிகளின் விளக்கத்தை ஆய்ந்து கொள்ளுவோம்.

*****

    2. அருட் சிவம்

3. அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ்

4. அருட்சிவ பதியாம் அருட்பெருஞ் ஜோதி

(உ-வி) பழந்தமிழ் மக்கள் கண்டு வழிபட்ட கடவுட் ஜோதியாம் கந்தழியே, பின்னர் சிவம் என்னும் செம்பொருளாகக் கற்பிக்கப்பட்டதாகும். சிவம்தானே செங்கதிர்ச் சோதியாம் வான் ஞாயிறு இதனை மேனாட்டார் ‘சன்’ (SUN) எனவும், கீழ்நாட்டார் ‘சியீன்’ எனவும் குறிக்கின்றனர். தமிழன் வான் ஜோதியைப் புறத்தே கண்டு வணங்கினது அபக்குவ அறிவு நிலையாம். பக்குவத்தே அகத்தில் கடவுட் ஜோதியை ஞான சூரியனாகக் கண்டு போற்றினான். இவ் இறை ஒளியும் அது விளங்கும் இடமும் சிவக்குறியாம் இலிங்கமும் ஆவிடையும் போன்று இருக்கக் கண்டவன், புற ஞாயிற்றையும் அதன் கோட் பரிவாரத்தையும்கூட இலிங்க ஆவிடை வண்ணமாகவே கண்டு கொண்டான்.

கடவுட் ஜோதியால் உருவாகியுள்ள உலகை, ஐம்பூதச் சேர்க்கையால் தோன்றி ஐவண்ணமாய் விளங்கக் கண்டு பஞ்சபூத இலிங்க வடிவம் கடவுளுக்கு அமைந்துள்ளதாய்க் கொண்டு ‘நமசிவய’ எனுந் தூல ஐந்தெழுத்துருவம் சிவஜோதிபதிக்குப் புனைந்து கொள்ளப்பட்டதாம். அப்படியுள்ள அக்கடவுட் ஜோதிபதியை உள் ஒளிர் சிவமாக உணர்ந்தவன், அதனைச் சிவாயநம எனப் போற்றிக் கொள்ளலால் சார்ந்து ஒன்றி அதுவாகி விடலாம் என்று உணர்ந்தான். இச் சிவாயநம என்பதுதான் சிவபதியின் சூக்குமத் திருவைந்தெழுத்து எனவும், அதுவே மந்திரமாய் விளங்கி கடவுட் சார்பைக் கூட்டி வைக்குங் காரணத்தால் அதுவே கடவுளை அடையும் நெறியாகவும் கருதிக் கொண்டான். இந்தச் சிவ நெறி விளக்கமாகவே சைவச் சாத்திர தோத்திரங்களும், மறை ஆகமங்களும், மூர்த்திதல தீர்த்தங்களும் ஆக்கிக் கொடுத்தனர் சைவப் பெருமக்கள்.

இன்று நாம் அந்தச் சிவபரம் பொருளை அருட்பெருஞ் ஜோதியாக உள்ளவாறு காண்கின்றோம். அருள் உண்மை விளக்கத்தால் அருட்பெருஞ் ஜோதி நம் மெய்யறிவுத் தலத்தில் வெளிப்பட்டிலங்கும் நிலைய�

mm moorthy
Plese send the PDF of அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம் by சுவாமி சரவணானந்தா ( my gmail id: manthiramoorthy.m@gmail.com)
Friday, July 26, 2013 at 10:06 am by mm moorthy