Vallalar Groups
Bangalore Dinakaran NewsPaper : பெங்களூர் , சிதம்பரம் ஜோதி இராமலிங்க சுவாமிகளின் அருட்பா பிரசார சங்கம் - தைப்பூச ஆண்டு விழா - 14-Mar-2010, ஞாயிற்று கிழமை


ஜோதி இராமலிங்க அடிகள் பிரசார சங்கத்தின் 79வது ஆண்டு விழா ,பெங்களூர், மார்ச் 12:
பெங்களூரில் இயங்கி வரும் சிதம்பரம் ஜோதி இராமலிங்க அடிகளின் சமரச வேத அருட்பா
பிரச்சார சங்கத்தின்
79வது ஆண்டு நிறைவு விழா மற்றும் 139 தைப்பூச பெருவிழாவும் வரும்
14ம் தேதி நடக்கவுள்ளது.
இது குறித்து அருட்பா சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெங்களூர் அருட்பாசங்க 79வது நிறைவு விழா மற்றும் 139வது ஆண்டு தைப்பூச பெருவிழா
வரும்
14ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்னை வசந்தி சங்கம்,
எண் 1, சங்கம் வீதி, காமராசர் சாலை திருப்பம், பெங்களூர்&42
என்ற முகவரியில் உள்ள சங்க வளாகத்தில் நடக்கிறது.
அன்று காலை 7 மணிக்கு நாராயணன், ஜோதிடர் ராமலிங்கம் முன்னிலையில் சன்மார்க்க
கொடியேற்றப்படுகிறது. சிறப்பு விருந்தினராக பி.வஜ்ஜிரவேல்
, ருத்ரமூர்த்தி, ஜி.வேணுகோபால்,
பொ.சந்திரசேகர், அருட் பிரக£சம், ஜெயபால் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
காலை 9.30 மணிக்கு ஜோதி இராமலிங்க அடிகளின் திருவுருவம் வீதி உலா வரும். இதை சங்க
தலைவர் நாராயணன் துவக்கி வைக்கிறார்.
சிறப்பு அம்சமாக இசைமாமணி எம்.ரவிகுமார் பங்கேற்கும் கன்ஜீரா மேர்சிங் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது.

Address:
சிதம்பரம் ஜோதி இராமலிங்க அடிகளின் சமரச வேத அருட்பா
பிரச்சார சங்கத்தின்,
அன்னை வசந்தி சங்கம்,
எண் 1, சங்கம் வீதி, காமராசர் சாலை திருப்பம்,
பெங்களூர்-42

Contact Information: Meenatchi Sundaram - 93425 61104 / Karthikeyan - 99088 68108