Kanchipuram K Thangavel
சன்மார்க்கக் குறள் வெண்பா

சன்மார்க்கக் குறள் வெண்பா

அல்லல் அகற்றும் அருட்பா அமுதத்தை
சொல்லித் துதிக்கச் சுகம் 1

ஆரமுதை உண்டார்க் கழிவில்லை ஆகவே
ஊரமுதை உண்ணா தொழி 2

அன்புடன் வாழ்வார்க் கழிவில்லை ஆருயிரைத்
துன்புறுத்த துன்பம் துணை 3

வானுள்ளோர் போல மரணமில்லா வாழ்வுதரும்
ஊனுண்னார் வாழும் உலகு 4

சன்மார்க்கச் சங்கத்தைச் சார்வார்க் கழிவில்லை
இன்பமாய் வாழ்வார் இசைந்து 5

இயற்கை இறைவனை ஏத்தினார்க் கில்லை
செயற்கை மரணச் செயல் 6

கரிசாலை தூதுவளை காலை புசிப்பான்
மரிக்கா நிலைபெறு வான் 7

மதம்பிடியா மக்களெலாம் மாநிலத்தில் என்றும்
இதமோடு வாழ்வார் இசைந்து 8

பயமின்றி பாருலகில் பற்றனைத்தும் விட்டு
தயவுடன் நிற்றல் தவம் 9

கள்ளப் புலனால் கடவுளைக் காணச்செல்
வள்ளல் பெருமான் வழி 10

அருட்பெருஞ்சோதி வள்ளலார் திருவருளால் இயற்றியது
Kanchipuram K Thangavel

#சன்மார்க்கக் கவிதைகள் 
#kanchipuramkthangavel

Kanchipuram K Thangavel
அருமை
3 days ago at 20:17 pm by Kanchipuram K Thangavel