DAEIOU - தயவு
71ஆம் ஆண்டு வடலூர் தைப்பூச ஜோதி தரிசன பாத யாத்திரை..(ஐவர் மலையிலிருந்து)
     ஆண்டு தோறும், திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஐவர் மலை..அதனருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள், ஜோதி தரிசனம் காண, தைப்பூசத்துக்கு, பாத யாத்திரையாகச் சென்று வருகின்றனர். 26.12.2018ல் துவங்கிய அந்த பாத யாத்திரைக் குழு 10.1.2019 வியாழக்கிழமை, காலையில், ஐவர்மலை பூசாரி தங்கவேல்-ஜோதிமணி இல்லத்தில், பிரார்த்தனை செய்து, பின்னர் திரு கருப்புச்சாமி அவர்கள் இல்லத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். மாலை 4.00 மணி அளவில், அருள்மிகு விநாயகர் கோவில் வழிபாடு மற்றும் ஊர்வலம் செல்கின்றனர். பின்னர் மாலை 5.00 மணிக்கு, ஐவர்மலை சன்மார்க்க சங்க போதகர் திரு ஆறுமுகம், திரு காளியப்பன் அவர்கள் இல்லங்களில் பிரார்த்தனை செய்கின்றனர். 

      மாலை 6.00 மணிக்கு மேல், திரு க.ராமசாமி-சு.வீரப்பன் ஆகியோர் இல்லங்களில் பிரார்த்தனை செய்கின்றனர். இரவு அங்கேயே தங்கி மறு நாள் தமது பாத யாத்திரையைத் துவக்குகின்றனர்.
IMG_20171002_124229.jpg

IMG_20171002_124229.jpg