DAEIOU - தயவு
வடலூரில் உள்ள சமரச சத்திய சுத்த சன்மார்க்க சங்கத்தில் அங்கத்தினர் சேர்க்கை அதிகரிக்கப்பட கோரிக்கை.
கடந்த ஒரு வாரமாக, வடலூரில் வள்ள்லார் 1865ஆம் ஆண்டில் தோற்றுவித்த சத்திய சங்கத்தில், அங்கத்தினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இன்னும் சேராத சன்மார்க்க அன்பர்கள், உடனே ஒவ்வுருவரும் ரூ.500/- செலுத்தி, 10 ஆண்டுகளுக்கு அங்கத்தினர் என்ற முறையில் பதிவு செய்து கொண்டு, பதிவு செய்த ரசீது நகலினை, வாட்ஸ் அப் குரூப்பில், பதிவேற்றம் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. கூகுள் ஸ்ப்ரெட் ஷீட் (Spread sheet) மாவட்ட வாரியாக எத்தனை சன்மார்க்க அன்பர்கள், தமது பெயரினை ரூ.500/- வடலூரில் செலுத்தி, அங்கத்தினராகச் சேர்ந்துள்ளனர் என்ற விபரம், அந்த ஸ்ப்ரெட் ஷீட்டில் அப்டேட் செய்யப்படுகின்றது.

       ஓரிரு மாதங்களில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள சங்கத்தில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், வடலூரில், வள்ளற் பெருமான் தோற்றுவித்த சன்மார்க்க சங்கத்தில் அங்கத்தினர் தொகை செலுத்தி, தம்மை இணைத்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

        இந்த உறுப்பினர் சேர்க்கை, உலகளாவிய அளவில் உள்ள எல்லா நாடுகளில் வசிக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கும் பொருந்தும். அவர்களும், தம்மை, வடலூரில், வள்ளற் பெருமான் தோற்றுவித்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், அங்கத்தினர் தொகை செலுத்தி இணைந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
IMG_20201017_232712_550.jpg

IMG_20201017_232712_550.jpg

vlcsnap-2019-01-23-22h10m07s923.png

vlcsnap-2019-01-23-22h10m07s923.png