DAEIOU - தயவு
27.1.2021 வடலூரில் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தில் மாடியில் தங்குவதற்கு வசதி ஏற்படுத்தல்.
   வடலூரில், லக்‌ஷ்மி சந்திரன் ஹாலுக்கு அருகில், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம், கடந்த 2020ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, 7.2.2020 அன்று, தர்மச்சாலை திறக்கப்பட்டு, அன்னம்பாலிப்பு நடைபெற்றது. 8.2.2020 அன்று, சங்கக் கட்டிடம் திறக்கப்பட்டது.   வரக்கூடிய அன்பர்களின் வசதிக்காக, அந்தக் கட்டிடத்தின் மேல்புறம், தங்குவதற்கு,  மதுரை மாவட்ட சன்மார்க்க அன்பர்களின் ஒத்துழைப்புடன், ஷெட் கட்டப்பட்டது. இதற்கான முயற்சிகளை, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு பெருமாள், கடந்த 2020 டிசம்பர் மாதம் அங்கேயே தங்கியிருந்து இந்தப் பணிகளைச் செய்துள்ளார். எனவே, மதுரை மாவட்டத்திலிருந்து வடலூருக்கு, தைப் பூச ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்கள், அங்கு தங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வரும் அன்பர்கள், முகக் கவசம் அணிவது, போதுமான இடைவெளி விடுவது போன்ற அரசின் அறிவுரைகளை தவறாமல் கடைப்பிடிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 27.1.2021 காலை முதலே அங்கு இந்த விசேஷ வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெறும்.எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
vlcsnap-2020-12-22-19h55m59s187.png

vlcsnap-2020-12-22-19h55m59s187.png

IMG_20170209_082013.jpg

IMG_20170209_082013.jpg