நான் ஒரு உண்மையைச் சொல்லுகின்றேன் .1957ம் ஆண்டு நான் மேட்டுக்குப்பம் போனபோது சித்தி வளாகத் திருமாளிகையில் கருக்கா பரதேசி என்ற ஒரு பெரியவர் 99 வயதானவர் இருந்தார். அங்கிருந்தவர்கள் இவர் வள்ளலாரை நேரில் பார்த்தவர் என்று சொன்னார்கள். வள்ளலாரை நேரில் பார்த்த ஒருவரை நாம் பார்க்கிறோமா என்று ஆனந்தப்பட்டேன். அவரிடம் வள்ளலாரைப் பற்றி எனக்கிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டுத் தெளிவு பெற்றேன்.அதில் அவர் உருவம் எப்படி இருந்தது என்று கேட்டேன்.இப்பொழுது கருங்குழியில் உள்ள ஓவியம் ஒரு ஓவியர் அவரைப் பார்த்து எழுதியது. அதைப்போல்தான் அவர் இருந்தார் என்றார்.நான் அதை இந்த இனையதலத்தில் எல்லோரும் இந்தப் படத்தையே பின்பற்றவேண்டும் என்று எழுதினேன்.செந்தில் ஐயா கூட வள்ளலார் இணையதளம் இதைத்தான் பயன் படுத்துகிறது என்று எழுதினார்.வள்ளலாரை நேரில் பார்த்தவர் சொன்னது. எனவே இதை மறுக்காமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளலாம்.திருவள்ளுவருக்கு சரியோ தவறோ ஒரு படம் அமைந்துவிட்டது போல் வள்ளலாருக்கும் அமையும்.ஓவியர் வரைந்ததால் இது வள்ளலாரின் நிஜ உருவமாகத்தான் இருக்கும். ள்.
7 Comments
If we say anything, we should follow it up on correct path.