Vallalar Universal Mission Trust   ramnad......
சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்....
சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
 எஞ்சல் இன்றிய துயரினால் இடரால்
இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி
வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்
அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்
தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.