உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை
உற்றறிய மாட்டார்களாய்
உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண்
டுறுபிறவி உண்டுதுன்பத்
தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு
சொர்க்கமுண் டிவையும்அன்றித்
தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும்
துர்ப்புத்தி யால்உலகிலே
கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம்
கொங்கையும் வெறுத்துக்கையில்
கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம்
கொள்ளுவீர் என்பர்அந்த
வண்டர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே.
Write a comment