DAEIOU - தயவு
சன்மார்க்க அன்பர்களின் சிந்தனைக்கு....
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றபோது, தேர்தலின்போது தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்,

1) வடலூரை சர்வ தேச மையமாக ஆக்குவோம் என அறிவித்தனர். 

அதன் அடிப்படையில், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், வள்ளற் பெருமான் வாழ்ந்த இடங்களை நேரில் வந்து பார்வையிட்டு, மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துச் சென்றுள்ளார்.

2) வருடந்தோறும் அக்டோபர் மாதத்தின் 5ம் தேதியினை, தனிப்பெருங்கருணை நாள் என அறிவிப்பு செய்தனர்.

சன்மார்க்கம் சார்ந்த இந்த அறிவிப்புக்கள், ஆட்சியாளர்களால் அறிவிக்கப்படும் நிலையில், மாநில அளவில் உள்ள சன்மார்க்கச் சான்றோர்கள், அமைப்புகள், மாண்புமிகு தமிழக முதல்வரைச் சந்தித்து, வாழ்த்துக்களைச் சொன்னால், மென்மேலும், சன்மார்க்க சங்கம் சார்ந்த கோரிக்கைகளை, தமிழ்நாடு அரசு நிறைவேற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களை மாநில மையத்தின் சார்பில், நன்றி சொல்வது யார் ?

இந்தப் பதிவினைப் பார்க்கும் ஒவ்வொரு சன்மார்க்க அன்பரும், மாநில சன்மார்க்க சங்கத்திற்கு, இது குறித்து தெரிவிப்பதற்காக, இச் செய்தி, இங்கு வெளியிடப்படுகின்றது.