DAEIOU - தயவு
5.10.2022 சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வள்ளற் பெருமானின் முப்பெரும் விழாவினைத் துவக்கி வைக்கின்றார்.
வள்ளலார் 200 முப்பெரும் விழா.

இடம்..கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மஹால், ராஜா அண்ணாமலைபுரம், பசுமை வழிச்சாலை ரயில் நிலையம் அருகில் (Near Greenways Road...Rly.Station), சென்னை. 600 028.\

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்,

5.10.2022 காலை 9.00 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில், முப்பெரும் விழாவினைத் தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக, காலை 7.00 மணியளவில் சுந்தரம் (புட்டபர்த்தி சாய்பாபா கோயில்) அருகிலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்க்ளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சன்மார்க்க நன்றி அறிவிப்புப் பேரணி நடைபெறவுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் சரியாக காலை 7.00 மணிக்கு பேரணியிலும், தொடர்ந்து முப்பெரும் விழாவிலும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன் அழைத்து மகிழும் நிர்வாகிகள்..

வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.
ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட சமர சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.