DAEIOU - தயவு
5.10.2022 மதுரை (அலங்காநல்லூர் அருகில்) கச்சக் கட்டி சத்திய ஞான சபை..சிறப்பு வழிபாடு.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகில் அமைந்துள்ள கச்சக்கட்டி கிராமத்தில், திரு கண்ணப்பன், அவரது மனைவி திருமதி மீனாள் ஆகியோரால் சத்திய ஞான சபை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, அங்கு, தற்காலிக ஓலைச் சாய்ப்பில், சன்மார்க்க அன்பர்கள் அமர்ந்து, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், சத்விசாரம் ஆகியவை செய்து வந்தனர். தினசரி அன்னதானம் நடைபெற்று வருகின்றது. 

நிரந்தரமாக, கல் கட்டுமானத்தில், சத்திய ஞான சபையினைக் கட்டும் பணியினை இதன் நிறுவனர் திரு கண்ணப்பன் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

வரவிருக்கும் 5.10.2022 அன்று, கல்கட்டுமானத்தில் மேல் கொண்டு கட்டிடம் கட்டும் பணியினைத் துவக்க அவர் தீர்மானித்துள்ளார். சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார்.



திரு கண்ணப்பன் அவர்கள் தொடர்பு எண். 97894 82188.