Srilanka Gnana Sabai Temple
5.10.2022 இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில் வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா நடைபெறல்.
      இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, சத்திய ஞான கோட்டம் ஆகும். மீசாலை வடக்கு என்ற பகுதியில் இந்த சத்திய ஞான கோட்டம் அமைந்துள்ளது. திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை இந்த சத்திய ஞான கோட்டம் பரப்பிக் கொண்டிருக்கின்றது. இதன் நிறுவனர் திரு கேதீஸ்வரன், அவரது மனைவி திருமதி விஜயலக்‌ஷ்மி மற்றும் மகன் தயானந்தன் ஆவார்.

       வரவிருக்கும் 5.10.2022 அன்று, இந்த சத்திய ஞான கோட்டத்தில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.  திரு அருட்பா பதிகங்கள் பாராயணம், அன்னதானம் .. அன்றைய தேதியில் வழங்கப்படும் 

      அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.