Srilanka Gnana Sabai Temple
5.10.2022 இலங்கை மீசாலை வடக்கு .. சத்திய ஞான கோட்டத்தில், வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
      5.10.2022 அன்று, வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நால் விழா இலங்கை மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.  திருமதி விஜயலக்‌ஷ்மி, அவர்களது மைந்தன் தயானந்தன் ஆகியோர், 160 நபர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கினர். திரு மணியன் மாஸ்டர் அவர்கள், வந்திருந்து, திரு அருட்பா பாராயணம் செய்தார்.

        அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சன்மார்க்க அன்பர் செய்த நிதி உதவியில், அந்த சத்திய ஞான கோட்டத்திற்கு அருகில் வசிக்கும், ஏழை எளிய மக்களுக்கு, 14 குடும்பங்களுக்கு, பொதி வழங்கப்பட்டது. அந்தப் பொதி ஒவ்வொன்றும் ரூ.2,500/- பெறுமதி உள்ளதாகும். அரிசி, பருப்பு, எண்ணெய், சோப்பு, தேநீர்ப் பொடி முதலானவை அந்தப் பொதியில் அடங்கும்.. 
20150119_184350.jpg

20150119_184350.jpg