Srilanka Gnana Sabai Temple
15.4.2023 Sri Lanka Chavakacheri Sathiya Gnana Kottam Founder Thiru Ketheeswaran returned to Sri Lanka.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி அருகே மீசாலை வடக்கு பகுதியில், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் விதத்தில், சத்திய ஞான கோட்டம் கட்டிய திரு கேதீஸ்வரன் கடந்த 20.3.2023 அன்று, இந்தியா..தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். வடலூர், இராமநாதபுரம், திருச்சி, திருவாதவூர், ஆவுடையார் கோயில் மதுரை திண்டுக்கல் மானாமதுரை ஆகிய பகுதிகளில் வாழும் சன்மார்க்க அன்பர்கள் வீடுகளில் தங்கி, அங்கங்கு, சுத்த சன்மார்க்க விரிவுரைகள் நிகழ்த்தி, 15.4.2023 அன்று, சென்னையிலிருந்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் பலாலி பன்னாட்டு விமான தளம் சென்றடைந்து, தமது சொந்த ஊரான, அளவெட்டி சென்றடைந்தார். அவருடன் வருகை புரிந்த மலேசிய அன்பர்கள் இருவரும், மலேசியா சென்றடைந்தனர்.