Vallalar Universal Mission Trust   ramnad......
உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன் ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
குணம்எ னக்கொளும் குணக்கடல் என்றே
மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
 பொய்யி லார்க்குமுன் பொற்கிழி அளித்த
புலவர் ஏறெனப் புகழ்ந்திடக் கேட்டு
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
ஐய நும்அடி அன்றிஓர் துணையும்
அறிந்தி லேன்இஃத றிந்தரு ளீரேல்
உய்யும் வண்ணம்எவ் வண்ணம்என் செய்கேன்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.