Vallalar Universal Mission Trust   ramnad......
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே நற்குலத்தார் எனஅறியீர் ..
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
 
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்

வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்

வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்

புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே

புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே

உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
 
கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே

களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்

சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ

செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ


தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே

திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே



மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே


வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.