Vallalar Universal Mission Trust   ramnad......
பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான் பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்

பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே

துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை

துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த

அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்

அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே

உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்

உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.

கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே

கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே

சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்

தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்

தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து

தானாகி நானாடத் தருணம்இது தானே

குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்

குருவேஎன் குற்றமெலாம் குணமாகக்கொண் டவனே.