Vallalar Universal Mission Trust   ramnad......
கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்

கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்


உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்

உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே

தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான

சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்

மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே

வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.